News June 29, 2024
கள்ளக்குறிச்சி: மத்திய அரசிடம் ஆளுநர் அறிக்கை?

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக, பாஜக ஆகியவை தனித்தனியே புகார் அளித்துள்ளன. இந்நிலையில் அவர் தனக்கு வேண்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளை வைத்து தனியே ரகசியமாக தகவல்களை திரட்டி, அறிக்கை தயாரித்ததாகவும், அந்த அறிக்கையை கடந்த 26ம் தேதி டெல்லி சென்றபோது மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோரிடம் அவர் அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Similar News
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: கிரேன் அறுந்து விழுந்து ஒருவர் பலி!

கள்ளக்குறிச்சி: சொக்கனந்தலை சேர்ந்த கன்னியப்பன் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் எறையூர்பாளையம் அருகே கிரேன் மூலமாக வழிகாட்டி பலகையை பொருத்திய போது கிரேன் ரோப் அருந்து கீழே விழுந்ததில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில நேற்று (நவ.20) எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
News November 21, 2025
ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் PM மோடி

தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் PM மோடி பங்கேற்கிறார். 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 3 அமர்வுகளில் PM மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், எதிர்கால தொழில்நுட்பம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு மத்தியில், சில தலைவர்களுடன் PM மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 21, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. தங்கம் 1 அவுன்ஸ்(28g) $16.32 சரிந்து $4,065-க்கும், வெள்ளி(1 அவுன்ஸ்) $0.83 குறைந்து $50.74-க்கும் விற்பனையாகிறது. நேற்று(நவ.20) சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்த நிலை நீடித்ததால் நம்மூர் சந்தையில் சவரனுக்கு ₹800 குறைந்தது. இன்றும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


