News June 22, 2024
கள்ளக்குறிச்சி: உயிரிழப்பு 55 ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 31, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News September 16, 2025
ஒரு லட்சம் வரை குறைந்த SWIFT காரின் விலை

சமீபத்தில் ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு, மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. ஸ்விஃப்ட் மாடலுக்கு ₹1.06 லட்சம் வரையிலும், டிசையர் மாடலுக்கு ₹87,000 வரையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் Wagon R (₹64,000வரையும்), Celerio (₹63,000), Alto K10 (53,000), S-Presso விலை (53,000) வரையும் குறைகிறது.
News September 16, 2025
தினமும் காலையில் இதை செய்ய மறக்காதீர்

*காலையில் எழுந்ததும் ஒரு சில நிமிடங்கள் மனதை லேசாக்கி, ஆழ்ந்த மூச்சு விடுங்கள் *ஓவ்வொரு நாளையும் புதிதாக தொடங்குங்கள் *காலை உணவை உட்கொள்ள தவறாதீர்கள் *இன்றைய நாளுக்கான உங்கள் வேலைகளை பட்டியலிடுங்கள் *சுறுசுறுப்பாக இருங்கள் *சக ஊழியர்களிடம் புன்னகையுடன் பேசுங்கள்.
News September 16, 2025
இதற்குதான் பாஜகவுடன் கூட்டணி..!

ஜெயலலிதா இறந்த பிறகு சிலர் அதிமுக ஆட்சியை கபளீகரம் செய்ய முயன்றதாகவும், அதனை காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுதான் (பாஜக) என்றும் EPS தெரிவித்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய அவர், நன்றிக் கடனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். பாஜக எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை எனவும் EPS குறிப்பிட்டுள்ளார்.