News April 4, 2024
கச்சத்தீவு: 50 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த விவகாரம்

கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போன விவகாரம் என்று இலங்கை தெரிவித்துள்ளது. கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்கு அளிக்கப்பட்டது குறித்து இந்தியாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதை திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து போன விவகாரம், அதை மீண்டும் பேச வேண்டாம் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் சாப்ரி குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 19, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 585 ▶குறள்: கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று ▶பொருள்: ஒரு உளவாளி என்பவன், மற்றவர்களின் மனதில் எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தாத தோற்றத்துடன், சந்தேகப்பட்டு பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், தனது நோக்கத்தை ஒருபோதும் வெளிப்படுத்தாதவனாகவும் இருப்பான்.
News January 19, 2026
‘அமைதி வாரியத்தில்’ சேர இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு!

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். காசாவில் நிர்வாகம் மற்றும் மறுகட்டமைப்பை மேற்பார்வையிட அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது. தனித்தனியான 11 உறுப்பினர்களை கொண்ட காசா நிர்வாக வாரியத்தின் தலைவராக டிரம்ப் இருப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மறுபுறம், அமைதி வாரியத்தில் சேர டிரம்பிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
News January 19, 2026
சச்சின் சாதனையை முறியடித்த கோலி

அதிக இடங்களில் சதமடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 35 வெவ்வேறு மைதானங்களில் சதமடித்து, சச்சினின் சாதனையை (34) முறியடித்துள்ளார். ரோஹித்(26), பாண்டிங்(21) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். இதேபோல், நியூசிலாந்துக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். கோலிக்கு(10) அடுத்தபடியாக காலிஸ்(9), ஜோ ரூட்(9), சச்சின்(9) ஆகியோர் உள்ளனர்.


