News August 18, 2024
நெல்லையில் கபாடி போட்டி – அமைச்சருக்கு அழைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் மாதம் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் நெல்லையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபாடி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விஎஸ்ஆர். ஜெகதீஷ் இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
Similar News
News December 7, 2025
நெல்லை: தாய் இறந்த துக்கம் தாளாமல் மகன் தற்கொலை

விகேபுரம் அருகே சிவந்திபுரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் வேலாயுதம் (25). தாய் அமுதவள்ளியை இழந்து மனமுடைந்த அவர், மது பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில், நேற்று வீட்டில் துர்நாற்றம் வீசியதால், விகேபுரம் போலீசார் கதவை உடைத்து சென்ற போது, வேலாயுதம் மின் விசிறியில் தூக்கிட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தாய் இறந்த சோகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 7, 2025
நெல்லை: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

நெல்லை மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு <
News December 7, 2025
நெல்லை: இளைஞரிடம் ரூ.24 லட்சம் நூதன மோசடி

நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த விஜயசுந்தர் (30), மேட்ரிமோனி தளத்தில் அறிமுகமான அகல்யா சேகர் மூலம் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டு முதலில் ரூ.10,000 முதலீடு செய்து லாபம் ஈட்டியுள்ளார். இந்த நம்பிக்கையில் அடுத்தடுத்து ரூ.24.05 லட்சம் செலுத்தினார். பணத்தை திரும்ப எடுக்க முயலும்போது மேலும் பணம் கேட்டதால் ஏமாற்றம் அடைந்து நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரணை.


