News September 27, 2025
தவெக தலைவர் விஜய் கைது ஆகிறாரா?

கரூரில் 29 பேர் பலியான சம்பவம் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ‘புஷ்பா-2’ திரைப்பட ரிலீஸின்போது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதேபோல் விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக தவெக பிரச்சார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என ஐகோர்ட் கூறியிருந்தது.
Similar News
News September 28, 2025
கரூர் சம்பவத்தால் மனவேதனை: பவன் கல்யாண்

விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என ஆந்திரா DCM பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இறந்தவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர் என்பது மனவேதனை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என X-ல் அவர் பதிவிட்டுள்ளார்.
News September 28, 2025
கரூர் துயரம்: ராகுல் காந்தி இரங்கல்

கரூர் துயர செய்தியை கேட்டு, மிகுந்த மனவேதனை அடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் கூறிய அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் நிர்வாகிகளை தேவையான உதவிகளை செய்யவும் ராகுல் கேட்டுக்கொண்டுள்ளார்.
News September 28, 2025
விஜய் பேசும்போதே நிகழத் தொடங்கிய மரணங்கள்

கரூருக்கு விஜய் வருவதற்கு முன்பே மரண ஓலத்திற்கான அறிகுறி இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கட்டுக்கடங்கா கூட்டம் கூடியதால், தவெக தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். அதன்பின், மக்கள் மத்தியில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மரணங்கள் நிகழத் தொடங்கியதாக கூறப்படுகிறது. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், பெரும் துயரத்தை தடுத்திருக்கலாம் என மக்கள் கூறுகின்றனர்.