News October 16, 2025
சற்றுமுன்: பங்குச் சந்தைகள் பெரும் லாபத்துடன் நிறைவு

இந்திய பங்குச் சந்தைகள் இன்று நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 862 புள்ளிகள் உயர்ந்து 83,467 புள்ளிகளிலும், நிஃப்டி 261 புள்ளிகள் உயர்ந்து 25,585 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. நெஸ்லே, கோடக் மஹிந்திரா, டைட்டன், ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. HDFC லைஃப், எடர்னல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், SBI லைஃப் இன்சூரன்ஸ், ஆகியவை அதிக நஷ்டத்தைச் சந்தித்தன.
Similar News
News October 16, 2025
சத்தீஸ்கரில் ஒரேநாளில் 171 நக்சல்கள் சரண்

சத்தீஸ்கரில் இன்று ஒரே நாளில் 171 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். அரசமைப்பை நம்பி வன்முறையை கைவிட்டு வந்தவர்களை பாராட்டுவதாகவும், மோடி அரசின் தீவிர நடவடிக்கையால் நக்சலிசம் அழிவின் இறுதியில் உள்ளதாகவும் கூறியுள்ளார். மீதமுள்ள நக்சல்களும் சரணடைய வேண்டும் என வலியுறுத்திய அவர், இல்லையென்றால் ஆயுதப்படைகள் அவர்களை வீழ்த்தும் எனவும் எச்சரித்துள்ளார்.
News October 16, 2025
பழைய பென்ஷன் திட்டம்: பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க ₹1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News October 16, 2025
உதவி பேராசிரியர் தேர்வு.. நாளை முதல் Apply பண்ணுங்க

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. www.trb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, வயது, பாடவாரியான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் நவ.10-ம் தேதியுடன் நிறைவடைகிறது.