News October 4, 2025
சற்றுமுன்: விஜய்க்கு உச்சகட்ட பாதுகாப்பு

தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகத்தில் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கரூர் பரப்புரையின்போது அவர் மீது செருப்பு, தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இதுகுறித்து அவரின் பாதுகாவலர்களிடம் நேற்று அறிக்கை கேட்கப்பட்டிருந்த நிலையில், Z பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 4, 2025
Thank you Captain ரோஹித் சர்மா!

ICC சாம்பியன்ஸ் டிராபி, T20 உலகக்கோப்பை என இந்திய அணியை கிரிக்கெட்டின் உச்சத்திற்கு அழைத்து சென்ற ரோஹித் சர்மாவின் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 2027 ODI உலகக்கோப்பை வென்று கொடுத்த பிறகு தான், ரோஹித் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், BCCI வேறோரு முடிவை எடுத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். உங்களுக்கு பிடிச்ச கேப்டன் ரோஹித் மொமண்ட் எது?
News October 4, 2025
திங்கள்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்…

காலாண்டு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை(அக்.6) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதன்படி, *முதல்நாளே காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் விநியோகிக்க வேண்டும். *2-ம் பருவத்துக்கான பாடநூல்கள் உடனே வழங்க வேண்டும். *பள்ளி வகுப்பறை உள்பட பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். *பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
News October 4, 2025
டிரம்ப் பேச்சை மதிக்காத இஸ்ரேல்.. தொடர் தாக்குதல்

காசாவில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டதாகவும், அதனால் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் டிரம்ப் கூறிய சில மணி நேரங்களில், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. 2 இடங்களில் புதிதாக நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். டிரம்ப்பின் அமைதி திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்துவதாக இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.