News October 27, 2025
சற்றுமுன்: இந்திய வீராங்கனை தற்கொலை

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய ஜூஜிட்சு வீராங்கனை ரோகிணி கலாம்(35) ம.பி.,யில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பள்ளியில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி வந்த இவர், வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவரது சகோதரி ரோஷிணி தெரிவித்துள்ளார். ரோகிணி கலாம் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். தற்கொலை தீர்வல்ல!
Similar News
News October 27, 2025
வீராங்கனைகள் மீதும் தவறு.. அமைச்சரின் சர்ச்சை கருத்து

இந்தூரில் ஆஸி., கிரிக்கெட் அணி வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதற்கு அவர்களே தான் காரணம் என்பது போல ம.பி., பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேசியுள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து அவர்கள் பாடம் கற்க வேண்டும் என்ற அவர், யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கிரிக்கெட்டர்கள் பிரபலமானவர்கள் என்பதால், அவர்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
News October 27, 2025
விவசாயிகளுக்கு 80% மானியம் தரும் அரசு திட்டம்

விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வாங்க SMAM Subsidy Scheme மூலம் மத்திய அரசு 40% – 80% வரை மானியம் வழங்குகிறது. இதனால் அவர்களின் நேரமும், உழைப்பும், பணமும் மிச்சமாகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது https://www.agrimachinery.nic.in/ -ல் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மானியத்துக்கு தகுதி பெற்றால் உங்கள் மொபைல் நம்பருக்கு SMS அனுப்பப்படும். SHARE.
News October 27, 2025
சிரஞ்சீவி படத்தில் நடிக்கிறாரா கார்த்தி?

நடிகர் கார்த்தியின் ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே நானியின் ‘Hit-3’-ல் கேமியோ ரோல் செய்த அவர், ‘Hit-4’-ல் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் சிரஞ்சீவி, இயக்குநர் பாபி இணையும் அடுத்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


