News October 4, 2025

சற்றுமுன்: இதுமட்டும் நடந்தால் விஜய் கைது

image

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திருமா, வேல்முருகன் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதே கருத்தையே நீதிமன்றமும் நேற்று கூறியுள்ளது. இந்நிலையில், அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், விஜய் மீது தவறு உள்ளது, அவரை கைது செய்ய வேண்டும் என சொன்னால் காவல் துறை அந்த கடமையை செய்யும் என்று திமுகவின் T.K.S.இளங்கோவன் கூறியது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

Similar News

News October 4, 2025

கரூரில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பட்டியலினத்தை சேர்ந்த 13 பேர் நெரிசலில் உயிரிழந்தனர். இதையடுத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தலைமையிலான குழு, விபத்து நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்தனர். மேலும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவருவோர், உயிரிழந்தோர் குடும்பத்தாரிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

News October 4, 2025

35 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயமா செய்யணும்!

image

35 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். டெய்லி 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்யத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!

News October 4, 2025

BREAKING: இபிஎஸ்க்கு அனுமதி மறுப்பு

image

நாளை திருச்செங்கோடு, குமாரபாளையத்திலும், நாளை மறுநாள் நாமக்கல், பரமத்திவேலூரிலும் ரோடு ஷோ செல்ல இபிஎஸ் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கரூர் துயர வழக்கில் நெடுஞ்சாலைகளில் பரப்புரை செய்ய அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, இபிஎஸ் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து, பரப்புரை கூட்டத்துக்கான மாற்று இடத்தை தேர்வு செய்ய இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.

error: Content is protected !!