News October 6, 2025

சற்றுமுன்: கனமழை பொளந்து கட்டும்

image

தமிழ்நாட்டில் இன்று முதல் 10-ம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. இன்று நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், நாளை நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

Similar News

News October 6, 2025

BREAKING: விஜய் அதிரடி முடிவு

image

தவெக முக்கிய நிர்வாகிகள் N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆக்டிவாக இல்லாததால் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தனியாக கையாண்டு வருகிறார். இந்நிலையில், அவரது நெருங்கிய நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர்களாக இருந்த நம்பிக்கையானவர்களை கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களாக நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கரூரில் பாதிக்கப்பட்டோரிடம் அவர் முதற்கட்டமாக வீடியோ காலில் பேச முடிவெடித்துள்ளாராம்.

News October 6, 2025

இரட்டை தலை பாம்பு பார்த்து இருக்கீங்களா?

image

இரட்டை தலை பாம்பு, இயற்கையில் மிகவும் அபூர்வமாகக் காணப்படுகிறது. மரபியல் கோளாறு காரணமாக, பிறக்கும்போது பாம்புகளுக்கு இரட்டை தலை இருக்கும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுவரை, புராணங்களில் மட்டும் கேள்விப்பட்ட இரட்டை தலை பாம்பின் போட்டோக்கள் SM-யில் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. மேலே உள்ள போட்டோஸை பாருங்க. நீங்க நேரில் பார்த்ததுண்டா? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 6, 2025

இதற்காக தான் நோபல் பரிசு

image

2025ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு மேரி பிரங்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சககுச்சி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் பாதுகாப்பு அம்சங்கள், T-செல்கள் பற்றிய ஆய்வுக்காக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ இம்யூன் நோய், கேன்சர் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கவும், ஸ்டெம் செல் மாற்றத்துக்கு பின் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும் இவர்களின் ஆய்வு உதவும்.

error: Content is protected !!