News September 27, 2025
சற்றுமுன்: விஜய்யை பார்க்க விபரீத செயல்

விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவெக தொண்டர் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை போலி அடையாள அட்டையுடன் திருச்சி விமான நிலையத்திற்குள் தவெக தொண்டர் புகுந்துள்ளார். அவரை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படையினர், தீவிரமாக விசாரணை நடத்தினர். பின், விஜய்யை பார்ப்பதற்காக இப்படி செய்ததாக அவர் கூறியதை அடுத்து, கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டார்.
Similar News
News January 3, 2026
பொங்கல் பரிசு பணம்.. முக்கிய தகவல் கசிந்தது

பொங்கல் பரிசுத்தொகைக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. பொதுவாக பொங்கல் பரிசு பணம் ரேஷன் கடைகளில் தான் வழங்கப்படும். ஆனால் இம்முறை வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பணத்தை கொண்டு செல்லும்போது பாதுகாப்பு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் இந்நடைமுறையை மேற்கொள்ளலாமா என பரிசீலித்து வருவதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.
News January 3, 2026
முக்கியமான Calls-ஐ மிஸ் பண்ணாம இருக்க DO THIS

வீட்டில் உள்ளவர்கள் அவசர தேவைக்கு உங்களுக்கு Call பண்ணும்போது, அதனை எடுக்கமுடியாமல் போனால் ஏதாவது அசம்பாவிதம் நேரலாம். இதனை தவிர்க்க போனில் இந்த Settings-ஐ ON- செய்யுங்க. ➤போனில் உள்ள Dial pad-க்கு சென்று ➤Calling Accounts ➤Call forward Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤நெருங்கிய உறவினரின் போன் நம்பரை உள்ளிடுங்கள். Call-ஐ நீங்கள் எடுக்கவில்லை என்றால், அது அவர்களுக்கு Forward ஆகும். SHARE.
News January 3, 2026
யார் இந்த வேலுநாச்சியார்?

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கு ஒரே மகளாக 1730-ல் பிறந்தார். தனது கணவர் மறைவையடுத்து, ஆங்கிலேயரிடம் இருந்து சிவகங்கையை 1780-ல் மீட்டெடுத்தார். இதனால் இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை என அழைக்கப்படுகிறார். 2008-ல் மத்திய அரசு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த வீரமங்கையை பெருமைப்படுத்தியது.


