News November 3, 2025
JUST NOW: தி.மலையில் சோழர் கால தங்கப்புதையல் கண்டெடுப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அருகே உள்ள கோவிலூர் சிவன் கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிவன் கோயில், 3ம் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்நிலையில், கோவிலின் சிதிலமடைந்த கருவறையை கட்டுவதற்காக இன்று (நவ.3) பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, 100-க்கும் மேற்பட்ட தங்கக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தங்கக்காசுகளை அரசு அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
Similar News
News November 4, 2025
தி.மலை: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. திருவண்ணாமலையில் மட்டும் 69 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. வரும் நவ.9ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
தி.மலை : அரசு பஸ் மோதி இளம்பெண் பலி!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பன்னீர்(35). இவரின் மனைவி தரணி(32). இருவரும் நேற்று முன் தினம் இரவு போளூரில் நடந்த உற்வைனர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பைக்கில் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது, ஆரணி – போளூர் நெடுஞ்சாலையில் வந்த அரசு ப மோதியதில் தூக்கி வீசப்பட்ட தரணி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
News November 4, 2025
தி.மலை: தண்டவாளத்தில் வாலிபர் சடலம்!

தி.மலை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நேற்று(நவ.3) மாலை தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் வாலிபர் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீசார் விசாரித்ததில், இறந்தவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த செல்வமணி(30)என்பது தெரிய வந்தது. மேலும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


