News August 16, 2024

அதை மட்டும் செய்யவே மாட்டேன்: ஜான்வி

image

ஆஸ்கர் விருதே கிடைக்கும் என்று சொன்னால் கூட தலையை மொட்டை அடித்து நடிக்க மாட்டேன் என நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தலை முடிக்காக தனது அம்மா ஸ்ரீதேவி அதிக அக்கறை எடுத்து கொள்வார் எனவும், 4 நாள்களுக்கு ஒருமுறை தலையில் ஆயில் மசாஜ் செய்வார் என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், முதல் படத்தில் நடிப்பதற்காக சிறிதளவு முடி வெட்டியதற்கு அம்மா மிகவும் கோபப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 25, 2025

இந்த மெசேஜை நம்பாதீங்க.. ரசிகர்களை எச்சரித்த ரகுல்!

image

Whatsapp-ல் தனது பெயரில் வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் எச்சரித்துள்ளார். இது குறித்து அவரின் X தள பதிவில், சில மெசெஜ்களின் Screenshot-ஐ பகிர்ந்து, இப்படி யாராவது தொடர்பு கொண்டால், உடனடியாக அந்த நம்பரை Block செய்யவும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, இது போன்று நடிகைகள் ருக்மணி வசந்த், அதிதி ராவ் ஆகியோரின் பெயரிலும் Whatsapp-ல் போலியாக மெசேஜ்கள் பரவின.

News November 25, 2025

Ro-Ko இல்லாததால் தள்ளாடுகிறதா இந்தியா?

image

தற்போது கவுகாத்தி டெஸ்டில் இந்திய அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. இந்திய அணியின் இந்த நிலைக்கு, கோச் கம்பீரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், இதில் மற்றுமொரு பரிமாணமும் உள்ளது. ரோஹித், கோலி ஆகியோர் இருந்திருந்தால், சொந்த மண்ணில் இந்திய அணி இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது என சில நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News November 25, 2025

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உயரிய விருது

image

சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான ‘வெள்ளி யானை’ விருதினை அன்பில் மகேஸ் பெறுகிறார். உ.பி.,யின் லக்னோவில் நாளை (நவ.26) நடைபெறும் 19-வது தேசிய ஜாம்போரி விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இவ்விருதை அவருக்கு வழங்கவுள்ளார். TN சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக இருக்கும் அன்பில், இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தியதற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

error: Content is protected !!