News January 3, 2025
JUST IN: குஷ்பு விடுவிப்பு!

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் குஷ்பு தலைமையில் பாஜக மகளிரணி பேரணி நடைபெற்றது. போலீஸ் தடையை மீறி இந்தப் பேரணியை நடத்தியதால் குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிரணி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 3 மணிநேரத்திற்கு பிறகு குஷ்பு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். அப்போது நிருபர்களிடம் பேசிய குஷ்பு, தங்களை ஆடுகள் வைக்கும் இடத்தில் அடைத்திருந்ததாக குற்றஞ்சாட்டினார்.
Similar News
News September 15, 2025
இந்தி மற்ற மொழிகளின் நண்பன்: அமித்ஷா

இந்தியை மற்ற மொழிகளுக்கு போட்டியாக பார்க்கக்கூடாது என அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்தி திவாஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தி மற்ற மொழிகளின் எதிரி அல்ல, நண்பன்தான் என்றும் கூறினார். மகாத்மா காந்தி போன்ற தலைவர்களுக்கு தாய்மொழி குஜராத்தியாக இருந்தாலும், அவர்கள் இந்தியை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News September 15, 2025
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

மகாராஷ்டிராவில் ஒரு பெண், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார். புனேவை சேர்ந்த 27 வயது சாஸ்வத், பிரசவ வலி வந்து சதாரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசேரியன் முறையில் 3 பெண் மற்றும் 1 ஆண் என 4 குழந்தைகள் பிறந்தன. இவருக்கு முன்பே இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதுதவிர, ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. மொத்தத்தில் இவர் 3 பிரசவங்களில் 7 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
News September 15, 2025
சசிகலாவை பார்க்க கூட கூட்டம் கூடியது: அமைச்சர் மூர்த்தி

திருச்சியில் நேற்று பரப்புரையை தொடங்கிய விஜய் திமுக ஆட்சியை கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். இதனையடுத்து விஜய்யின் பேச்சு மற்றும் அவருக்கு கூடிய கூட்டம் குறித்து, திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை பார்க்க கூட கூட்டம் கூடியதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கூட்டங்களை வைத்து அரசியல் பேசுவது சரியாக இருக்காது எனவும் கூறியுள்ளார்.