News September 28, 2025
Just In: N.ஆனந்த், CTR நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக பொ.செ., N.ஆனந்த், CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது. குற்றமற்ற கொலை செய்ய முயற்சி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அலட்சிய செயல்களுக்கு தண்டனை, கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை ஆகிய 5 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
Similar News
News January 2, 2026
BREAKING: அதிகாலையில் மீனவர்கள் அதிரடி கைது

தமிழக மீனவர்களை மீண்டும் அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 தமிழர்களை கைது செய்ததோடு, படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
News January 2, 2026
இந்திய அணியில் என்ன மாற்றம் செய்யலாம்?

வரும் ஜனவரி 31-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட T20I WC-க்கான அணியில் மாற்றங்கள் செய்யலாம் என ICC தெரிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வலுவாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தாலும், இவருக்கு பதில் இவரை கொண்டுவரலாமே என்ற சில விமர்சனங்களும் உள்ளது. இந்திய அணியில் ஏதாவது மாற்றம் செய்யலாமா அல்லது இந்த அணியே பந்தயம் அடிக்கும் என நினைக்கிறீங்களா?
News January 2, 2026
அரசு ஊழியர்களுக்கு தீர்வு கிடைக்குமா?

<<18733786>>இடைநிலை ஆசிரியர்கள்<<>> கடந்த 7 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட கூட்டமைப்புகள் ஜன.6 முதல் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளன. ஆய்வறிக்கை பரிசீலனைக்கு பின் ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதுபற்றி கூட்டமைப்புகளுடன் அமைச்சர் எ.வ.வேலு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


