News January 15, 2026
JUST IN விருதுநகருக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்

அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி பகுதியில் தி.மு.க. தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு இன்னும் சரியான தேதி குறிப்பிடாத நிலையில் நாளை(ஜன.16) பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பின்னர் இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏற்பாடுகளை காலை 11 மணியளவில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News February 20, 2026
BREAKING விருதுநகர்: வைகோவுக்கு பதிலடி கொடுத்த எம்.பி

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, ‘காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம்’ என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கூட்டணி குறித்து பேச கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன். பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே என விருதுநகர் MP மாணிக்கம்தாகூர் தனது X பதிவில் பதிவிட்டுள்ளார்.
News February 20, 2026
விருதுநகர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 20, 2026
சாத்தூர்: தண்ணீரில் மயக்க மருந்து கலந்து நகை திருட்டு

மதுரையில் பழவியாபாரம் செய்யும் மீனாள்(69) என்பவருக்கு இவரிடம் பழம் வாங்கிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண் அழைத்ததின் பேரில் மீனாள் சாத்தூர் அருகே கோஸ்குண்டு பகுதியில் குறி கேட்க சென்றுள்ளார். பின் ஊருக்கு புறப்பட்ட மீனாள் அப்பெண்ணிடம் தண்ணீர் வங்கி குடித்துள்ளார். தண்ணீரில் மயக்க மருந்து கலந்ததை அறியாத மீனாள் மயங்கிய நிலையில் அப்பெண் மீனாளின் 5 பவுன் நகை, ரூ.10000 திருடிச் சென்றுள்ளார்.


