News January 5, 2026

JUST IN நெல்லையில் தந்தைக்கு தூக்கு தண்டணை.!

image

நெல்லையில் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து இன்று (ஜனவரி 5) சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வள்ளியூரில் கடந்த 2024ஆம் ஆண்டு பதியப்பட்ட போக்சோ வழக்கில் சிறுமிக்கு பிறந்த குழந்தையின் டிஎன்ஏ பரிசோதனை அடிப்படையில் தந்தை குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 16, 2026

திருநெல்வேலி: வீட்டு வரி பெயர் மாத்த அலையுறீங்களா??

image

திருநெல்வேலி மக்களே; நீங்க வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடிக்கும்போது அடுத்து வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும். SHARE பண்ணுங்க

News February 16, 2026

திருநெல்வேலி: ரூ.3 லட்சத்தை காப்பாற்றிய அரிசி டப்பா

image

கிருஷ்ணாபுரம் செல்லத்துரை நகரை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டை பூட்டி வெளியே சென்ற போது இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து புகுந்துள்ளனர். அங்கு பீரோவில் இருந்த ரூ.30,000 திருடு போனது. அதே நேரத்தில் அரிசி டப்பாவில் வைத்திருந்த ரூ.3 லட்சம் தப்பியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 16, 2026

திருநெல்வேலி: போலீஸ் வீட்டில் திருடிய சிறுவன் கைது

image

விகேபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றும் ஞானசுந்தர்(38) என்பவரது பொன்மா நகரில் உள்ள வீட்டில் ரொக்க பணம், பொருட்கள் கொள்ளை போனது. இது குறித்து கல்லிடைகுறிச்சி போலீசார் விசாரித்து வந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட தெற்கு பாப்பான்குளம் ஜெயக்குமார்(27) கருத்தப்பிள்ளையூர் வினித்(22), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து பணம், பொருட்களை மீட்டனர்.

error: Content is protected !!