News October 29, 2025
JUST IN: நத்தம் அருகே கார் மோதி கணவன்-மனைவி பலி!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோசுகுறிச்சி-கும்பச்சாலை பகுதியில் இன்று அதிகாலை மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியதில் சாலையில் நடந்து சென்ற கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார் இருவரின் உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 29, 2025
திண்டுக்கல் வீட்டில் நுழைந்த உடும்பு!

திண்டுக்கல் மா, 23வது வார்டு ஆர்,வி.நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் மதுரை வீரன் கோவில் எதிரே உள்ள வீட்டில் (அக்.29) இன்று காலை உடம்பு ஒன்று நுழைந்தது. இதைக் கண்ட குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர். மேலும் திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடும்பை உயிருடன் பத்திரமாக பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
News October 29, 2025
திண்டுக்கல் காவல்துறை சமூக வலைதள அறிவுரை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல் (அக்.29) வழங்கியுள்ளனர். வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவது, மது அருந்தி வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகத்தில் செலுத்துவது போன்றவை விபத்துக்கு காரணமாகின்றன என்பதால், இத்தகைய செயல்களை தவிர்த்து பாதுகாப்பாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News October 29, 2025
திண்டுக்கல்: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள் APPLY NOW!

திண்டுக்கல் மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்!


