News December 16, 2025

JUST IN: திருவள்ளூரில் மழை கொட்டப் போகுதா..!?

image

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் காணப்பட்ட நிலையில் தற்போது சாரலுடன் மழை பெய்து வருகிறது. சாரல் மழையில் நனைந்தவாறு வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இந்த திடீர் மழையில் தாக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலும் நீடிக்குமா என்பது தற்போது கேள்வியாகியுள்ளது. உங்க ஏரியாவில் மழையா..?

Similar News

News December 21, 2025

திருத்தணி: பாழடைந்த குடியிருப்பில் மனித எலும்புக்கூடு!

image

திருத்தணி ரயில் நிலையம் அருகே, ஊழியர்கள் தங்குவதற்கு 15-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படாமல் பாழடைந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக அங்கு யாரும் தாங்காத நிலையில், நேற்று அவ்வழியாக சென்ற இளைஞர்கள், ஒரு குடியிருப்பில் எலும்புக்கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அது கொலையா என விசாரித்து வருகின்றனர்.

News December 21, 2025

திருவள்ளூர்: ரயில் மோதி மாணவி உடல் சிதறி பலி!

image

திருவள்ளூர்: கடம்பத்தூர் அடுத்த வெண்மனம் புதூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஹிரதா (17). இவர் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக மோதியதில் உடல் சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 21, 2025

ஆவடியில் வாக்காளர் சேவை முகாம்

image

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் சேவை முகாம் நாளை (21.12.2025) நடைபெறுகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் வாக்காளர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இ-சேவை வசதியாக 89259 02432 என்ற எண்ணிலும், voters.eci.gov.in இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆவடி மாநகராட்சி அறிவித்துள்ளது.

error: Content is protected !!