News November 4, 2025
JUST IN: திருப்பூர் அருகே விபத்து

திருப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியின் வாகனம் பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி குழந்தைகளை அழைக்க சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளியின் வேன் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இவ்விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 4, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, மாஸ்கோ நகர், குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், கொங்கணகிரி கோவில், ஆர்.என்.புரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 4, 2025
திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த அமைச்சர் சாமிநாதன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தற்போது தெற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள இல.பத்மநாபனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
News November 4, 2025
திமுக துணை பொதுச்செயலாளராக சாமிநாதன் நியமனம்

தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராகவும், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ஆகவும் இருப்பவர் சாமிநாதன். இவர் தற்போது திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இன்று திமுக துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமைச்சர் சாமிநாதன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


