News February 25, 2026
JUST IN: தருமபுரியில் நாளை கடையடைப்பு!

தருமபுரி: பி.ஆர் ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், நோயாளியின் நலன் கருதி மீண்டும் அதே இடத்தில் புறநகர் பேருந்து நிலையம் செயல்பட வேண்டி தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டி, கவனம் ஈர்க்கும் வகையில்
நாளை(பிப்.26) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு நடைபெறவுள்ளது.
Similar News
News March 1, 2026
தருமபுரி: மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

தருமபுரி: புலிக்கரை அருகே உள்ள மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நேற்று(பிப்.28) நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி அதிமுக மாவட்ட கழக செயலாளர் கே. பி. அன்பழகன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் பத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
News March 1, 2026
தருமபுரியில் அதிரடி கைது!

இண்டூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று(பிப்.28) மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி இருந்த முனியப்பன், முருகன் ஆகியோரை சோதனை செய்த போது தலா 200 கிராம் கஞ்சாவை விற்க பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
News March 1, 2026
தருமபுரியில் இருவர் துடிதுடித்து பலி!

அங்கனாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(26). இவர் அன்னசாகரம் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் கீழ்காரஒணி சந்திப்பு சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த ஹரிகிருஷ்ணன்(25) என்பவரின் பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


