News March 22, 2025
JUST IN: செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பு

செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கிராம உதவியாளராக பணியாற்றிய முனுசாமி 2001இல் மரணமடைந்தார். அவரின் மகன் ராஜாகிளிக்கு கருனை அடிப்படையில் 3 மாதங்களுக்குள் வேலை வழங்க 2023ல் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு நேட்டீஸ் அனுப்பியும் ஆஜராகததால் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
Similar News
News September 22, 2025
செங்கல்பட்டு: சிட்லபாக்கம் ஏரியில் கிடந்த சடலம்

தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பெரிய ஏரியில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சிட்லபாக்கம் M.G.R., நகர், பகுதியைச் சேர்ந்த ஏகவள்ளி என்பது தெரியவந்தது.
News September 22, 2025
செங்கல்பட்டு: நள்ளிரவில் இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை

SP. கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் நெல்லையைச் சேர்ந்த பாரதி கண்ணன் (ம) தஞ்சாவூரை சேர்ந்த ராஜன் ஆகிய இருவரும் அறை எடுத்து ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பாரதி கண்ணன், ராஜன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சில மர்மநபர்கள் இருவரையும் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் பாரதி கண்ணன் உயிரிழந்த நிலையில் ராஜன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
News September 22, 2025
செங்கல்பட்டில் மிஸ் பண்ணக்கூடாத 8 கோயில்கள்!

1.கந்தசுவாமி முருகன் கோவில், திருப்போரூர்
2.ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயம், செங்கல்பட்டு
3.வல்லம் மலை குகைக் கோயில் , வல்லம்
4.ஞானபுரீஸ்வரர் கோயில், செங்கல்பட்டு
5.சதுர்புஜ ராமர் கோயில், செங்கல்பட்டு
6.கழுகு மலை கோயில், திருக்கழுகுன்றம்
7.ஆதிபராசக்தி கோயில், மேல்மருவத்தூர்
8.காளத்தீஸ்வரர் திருக்கோயில், காட்டாங்குளத்தூர்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்