News December 29, 2025
JUST IN: கரூரில் பிரபல நடிகை மீது வழக்கு!

கரூரைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளரிடம் 10 லட்சம் ரூபாய் பணம், பிஎம்டபிள்யூ கார், ஐந்து சவரன் நகை ஆகியவற்றை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ராணி அவரது கணவர் பாலாஜி, பாலாஜியின் நண்பர் உள்ளிட்ட மூன்று பேர் மீது கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 1, 2026
கிருஷ்ணராயபுரம் அருகே வசமாக சிக்கிய பெண்கள்!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டு மகாதானபுரம் மற்றும் பில்லா பாளையம் பகுதியில் வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மதுவிற்ற சங்கர் மனைவி அன்னக்கிளி (55), வாசுதேவன் மனைவி ரேவதி (55) ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 52 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
News December 31, 2025
கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
கரூர் அருகே பெண் அதிரடி கைது!

கந்தம்பாளையத்தை சேர்ந்த விசாலாட்சிக்கும், கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நடையனூர் அருகே கார்த்திக்கின் சகோதரி அமுதாவும் (50), அவரது மகன் ஜெகனும் வீட்டில் இருந்தபோது விசாலாட்சி மற்றும் ஆண் ஒருவர் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாலாட்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


