News January 7, 2026

JUST IN: ஊட்டியில் அதிகாரிகள் அதிரடி!

image

ஊட்டியில் தனியார் அறக்கட்டளை வளாகத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டதாக வந்த புகாரின் பேரில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 17 அறைகளுக்கு மூன்று ஆண்டுகளாக வாடகை செலுத்தாததும், ஒன்றரை ஆண்டுகளாக உரிமம் புதுப்பிக்காமல் செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கமிஷனர் கணேசன் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் சிபி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் 17 அறைகளுக்கு சீல் வைத்தனர்.

Similar News

News March 8, 2026

நீலகிரி மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

image

குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கோழிக்கரை, கேஎன்ஆர் பகுதிகளில் இரண்டு குட்டிகளுடன் ஒன்பது யானைகள் மூன்று நாட்களாக சுற்றி வருகின்றன. எனவே குன்னூர் வனச்சரகர் ரவீந்தர நாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொது மக்கள் வாகனங்களை கவனமுடன் இயக்கிச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News March 8, 2026

நீலகிரி கலெக்டர் வேண்டுகோள்!

image

பந்தலூர் அருகே தாளூர் பகுதி தமிழக – கேரளா மாநில எல்லையில் கேரளம் நெடுஞ்சாலை துறையினர் மலையாள மொழியின் வரவேற்பு பலகையை பிரச்சினைக்குரிய இடத்தில் வைத்தனர். இதனால் அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், இவ்விவகாரம் தொடா்பாக வயநாடு ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.

News March 8, 2026

கூடலூர்: செக்ஷன் 17 நில பிரச்சினை – ஆட்சியரிடம் MLA மனு

image

கூடலூரில் செக்ஷன் 17 நில பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் அனுப்கான், ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!