News January 1, 2026

JUST IN: ஆத்துார் பெண் சம்பவ இடத்திலேயே பலி!

image

ஆத்துார் மல்லியக்கரையை சேர்ந்த மஞ்சுளா (45) வாய் பேச முடியாதவர். இந்தநிலையில் மஞ்சுளா தனது உறவினர்களுடன் நேற்று நள்ளிரவு மேட்டூர் சாலையில் ஆட்டோ சென்றுக்கொண்டு இருக்கும் போது எதிர்பாரதவிதமாக தனியார் ஆம்னி பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் மஞ்சுளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 10, 2026

சேலம்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 10, 2026

சேலம் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 10, 2026

சேலம்: வயதுக்கு மீறிய நபருடன் காதல்..தந்தை விபரீத முடிவு!

image

சேலம் சித்தர்கோயில் அருகே உள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த திருநெல்வேலியை சேர்ந்த வர்ஷினி (22). இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான சக்திவேல்(40) என்பவரைக் காதலித்ததால், அவரது தந்தை வரதராஜன் ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்துள்ளார்.இந்தநிலையில் தந்தை வரதராஜனை பிடிக்க சேலம் போலீஸ் கமிஷனர் 4 தனிப்படை அமைத்துள்ளார்.

error: Content is protected !!