News October 4, 2025
டிகிரி முடித்தாலே போதும்; ₹35,400 வரை சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
Similar News
News April 3, 2026
அதிமுகவில் இணைந்த திமுக, மதிமுக நிர்வாகிகள்

கரூரில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சி நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 24-வது வார்டு திமுக உறுப்பினரும் கரூர் மாநகர மேற்கு பகுதி Ex செயலாளருமான அன்பரசன் மற்றும் கரூர் மாவட்ட மதிமுக Ex பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். போதை கலாசாரம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிட EPS-ன் தலைமையை ஏற்று இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
News April 3, 2026
PM மோடியுடன் ரஷ்ய DPM முக்கிய ஆலோசனை

2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய DPM டெனிஸ் மந்த்ரொவ் PM மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதில் இருதரப்புக்கு இடையேயான உறவு, வர்த்தகம், உரங்கள் விநியோகம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக X-ல் PM மோடி பதிவிட்டுள்ளார். அதோடு, 2025-ல் நடந்த இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கு, இருதரப்பும் மேற்கொள்ளும் முயற்சிகளை தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News April 3, 2026
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு மசோதாவுக்கு தவெக எதிர்ப்பு

வெளிநாட்டு நிதி பங்களிப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் மக்கள் சார்ந்த கல்வி & மருத்துவத் தொண்டு நிறுவனங்களை முடக்கும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு இருப்பதாக தவெக குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு துடிப்பது ஏன் எனவும் தவெக கேள்வி எழுப்பியுள்ளது.


