News October 7, 2024
சற்றுமுன்: பள்ளிகள் திறந்த உடனே பறந்த உத்தரவு

காலாண்டு விடுமுறைக்கு பின், இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 1-5ம் வகுப்பு மாணவர்களின் தொகுத்தறி மதிப்பெண்களை TNSED செயலில் பதிவேற்றுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை அக்.9க்குள் உள்ளீடு செய்வது அவசியம். இது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 5, 2025
சேலம், தென்காசியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை (ஆகஸ்ட் 6) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், வரும் 23-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) சங்கரன்கோவில் உள்ள சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News August 5, 2025
₹17,000 கோடி லோன் மோசடி: ED வலையில் அனில் அம்பானி

லோன் மோசடி வழக்கில், அனில் அம்பானி இன்று ED விசாரணைக்கு ஆஜரானார். ₹17,000 கோடி மோசடி தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. யெஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் சுமார் ₹78,000 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு, அந்தப் பணம் வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணமெல்லாம் எங்கு சென்றிருக்கும்?
News August 5, 2025
இந்த அறிகுறிகள் இருக்கா? எச்சரிக்கை!

ஆண்களிடையே புராஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 40 வயதை தொட்டவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வெளியேற்றம் குறைவது, சிறுநீர் போகையில் முடிக்கையில் வலி & அசவுகரியம், முதுகு வலி, சிறுநீர் (அ) விந்தில் ரத்தம், திடீர் உடல் எடைக் குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை ஆலோசியுங்கள். SHARE IT