News August 19, 2024

சற்றுமுன்: பிரபல ரவுடி என்கவுன்டர்

image

குமரியில் பிரபல ரவுடி செல்வத்தை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். 6 கொலை உட்பட 28 வழக்குகளில் தொடர்புடைய செல்வத்தை பிடிக்க முயற்சி செய்தபோது, போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தி, அவரை பிடித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப்பின் ரவுடிகள் மீது அடுத்தடுத்து என்கவுன்டர் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 17, 2026

பெண்கள் பாதுகாப்பு.. திமுகவை சாடிய அன்புமணி

image

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதவருக்கு எதற்கு முதல்வர் பதவி என்று அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். திமுகவினர் ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர்கள் என்பதை TN பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இதுபோன்ற ஒரு ஆட்சியை இதுவரை பார்த்ததில்லை என்று திமுகவை கடுமையாக தாக்கினார். மேலும், இதை 3 மகள்களை பெற்ற ஒரு தந்தையாக சொல்வதாக தெரிவித்தார்.

News March 17, 2026

நாட்டின் வீரத் திருமகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

நாட்டு மக்கள் அமைதியாக வாழ, எல்லையில் உயிர் தியாகம் செய்யும் வீரர்கள் ஏராளம். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு மக்கள் நாயகனை நாடு இழந்திருக்கிறது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பணியில் இருந்த நாயக் திலக் சிங், மயங்கி விழுந்துள்ளார். மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து, ராணுவ மரியாதையுடன் நாயக் திலக் சிங் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. RIP

News March 17, 2026

சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

image

திமுக கண்டன கூட்டத்தில் <<19406314>>நயன்தாரா<<>> குறித்த சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் நாகரிகம் இல்லாத அதிமுகவினர் பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருப்பதாக கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில், நயன்தாரா பெயரை எந்த நோக்கத்துடன் கூறவில்லை என்று சி.வி. சண்முகம் வருத்தம் தெரிவித்திருந்த நிலையிலும், அவர் மன்னிப்பு கேட்கக்கோரி கண்டனங்கள் வலுத்து வருகிறது.

error: Content is protected !!