News March 28, 2025
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(DA) உயர்வு!

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மேலும் 2% உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அகவிலைப்படி 53-ல் இருந்து 55% ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.
Similar News
News December 1, 2025
14,967 பணியிடங்கள், ₹78,800 வரை சம்பளம்: முந்துங்க!

கேந்திரிய வித்யாலயா & நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாகவுள்ள 14,967 ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th, UG, PG உடன் B.Ed (பதவிகளுக்கேற்ப). சம்பளம்: ₹18,900 – ₹78,800 (பணிக்கு ஏற்ப). விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.4. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News December 1, 2025
BREAKING: கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று (டிச.1) கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹10.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ₹1,739.50-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ₹868.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.
News December 1, 2025
அதிமுக எங்களை ஏமாற்றவில்லை: பிரேமலதா

ராஜ்யசபா MP விவகாரத்தில் அதிமுக தேமுதிகவை ஏமாற்றவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். அதிமுகவிடம் MP பதவியை 2025-ல் கேட்டதாக கூறிய அவர், அதிமுகவில் இருந்து 2026-ல் தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், MP சீட் விவகாரத்தை அதிமுக ஏமாற்றிவிட்டதாக பேசி வந்த இவர், இப்படி அந்தர் பல்டி அடித்திருப்பது கூட்டணி கணக்குக்கு தானா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


