News April 25, 2024

இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு

image

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபேட் எனப்படும் மின்னணு ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டி தொடரப்பட்ட வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நாளை மறுநாள் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால், இந்த தீர்ப்பை எதிர்பார்த்து அனைத்து அரசியல் கட்சியினரும் உள்ளனர்.

Similar News

News September 24, 2025

பெண் ஜனாதிபதிகளிடம் விருது பெற்றது பெருமை: ஊர்வசி

image

‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இது ஊர்வசி வாங்கும் 2-வது தேசிய விருது. 2 தேசிய விருதுகளையும் பெண் ஜனாதிபதிகளிடம் பெற்றது பெருமையாக நினைக்கிறேன் என விருதை பெற்ற பின் ஊர்வசி தெரிவித்துள்ளார். பிரதீபா பாட்டீல் மற்றும் திரவுபதி முர்மு ஆகியோர் கைகளால் விருதுகளை ஊர்வசி வாங்கியுள்ளார்.

News September 24, 2025

USA கிரிக்கெட் சங்கத்தை இடைநீக்கம் செய்தது ICC

image

அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசியின் சட்ட திட்டங்களை மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக முறையான நிர்வாகம் அமைக்கவில்லை, ஒலிம்பிக் அங்கீகாரம் பெறவில்லை, விதிகளை மீறிய செயல்பாடுகள் உள்ளிட்டவையை காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஐசிசி போட்டிகளில் அமெரிக்காவால் பங்கேற்க முடியாது.

News September 24, 2025

மோசடி வழக்கில் சூர்யா வீட்டு பணி பெண் உட்பட 4 பேர் கைது

image

நடிகர் சூரியாவுக்கு 2021-ம் ஆண்டு முதல் தனி பாதுகாவலராக உள்ளவர் அந்தோணி. இவர் சூர்யா வீட்டில் வேலை செய்யும் சுலோச்சனாவின் மகன் நடத்தும் தங்க நாணயம் திட்டத்தில் ₹50 லட்சம் வரை டெபாசிட் செய்து ஏமாந்துள்ளார். ₹50 லட்சத்தில் ₹7 லட்சம் மட்டுமே அந்தோணிக்கு திரும்ப கிடைத்ததால், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சுலோச்சனா, அவரது மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!