News February 10, 2025
ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1736334221610_55-normal-WIFI.webp)
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பதை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை கடந்த சில நாள்களாக விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநரிடம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 11, 2025
இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738902885318_785-normal-WIFI.webp)
TN முழுவதும் தைப்பூச நாளான இன்று அரசு விடுமுறை என்றாலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது அசையா சொத்துகளை மங்களகரமான நாளில் பதிவு செய்ய விரும்புவதால் இன்றைய தினம் ஆவணப் பதிவுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக காலை 10 மணி முதல் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். ஆனால், விடுமுறை நாளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
News February 11, 2025
டெல்லியில் கிரிமினல் வழக்கு உள்ள MLAக்கள் குறைவு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738996875472_1241-normal-WIFI.webp)
டெல்லி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 70 வேட்பாளர்களில் 31 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட 699 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த சங்கம், ஒருவர் மீது கொலை முயற்சியும், இருவர் மீது பெண்களுக்கு எதிரான வழக்கும் உள்ளதாகக் கூறியுள்ளது. இது கடந்த தேர்தலில் கிரிமினல் வழக்கு உள்ளதாக அறிவித்த 43 MLAக்களை விட குறைவாகும்.
News February 11, 2025
நகை அடகு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738535532075_1204-normal-WIFI.webp)
வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள், RBI விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். கடன் நிறுவனங்கள் அனைத்துக்குமே ஒரே மாதிரியான விதிமுறைகளைத் தான் RBI வகுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நேரில் வராவிட்டாலும், நகை மதிப்பீடு முழுமை அடையாவிட்டாலும் ஏலம் விட முடியாது என்றார்.