News February 10, 2025
ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பதை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை கடந்த சில நாள்களாக விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநரிடம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
தேர்தலில் போட்டியிடமாட்டேன்: வைகோ

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். இப்போது மட்டுமல்ல, ஒருகாலமும் பேரவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். பார்லிமென்ட்டில் மனநிறைவுடன் பணியாற்றி 1,300 முறை பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக, 3 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது.
News March 13, 2026
திமுகவுக்காக முதல்முறை களத்தில் OPS

தென்மாவட்டங்களில் இன்று முதல் திமுகவுக்காக OPS தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் அவர் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். திமுகவில் இணைந்தபிறகு, அக்கட்சிக்காக முதல்முறையாக OPS வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளது கவனம் பெற்றுள்ளது. OPS-ஐக் கொண்டு தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூக வாக்குகளை பெற திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News March 13, 2026
ஒரே இரவில் மாற்றம்.. அதிமுக கூட்டணியில் இணைந்தார்

தென்மாவட்ட அரசியலில் செல்வாக்குள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 90-களில் திமுக, அதிமுகவுக்கு எதிராக உருவெடுத்த டாக்டர் சேதுராமனுக்கு, தென்மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. நேற்று இரவு EPS-ஐ நேரில் சந்தித்த சேதுராமன், 2026 தேர்தலில் அதிமுகவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


