News June 10, 2024
செந்தில் பாலாஜி வழக்கில் ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை ED கைது செய்தது. சுமார் ஓராண்டாக சிறையில் இருக்கும் அவர், இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இன்று இறுதி வாதங்களை கேட்டறிந்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இது செந்தில் பாலாஜி தரப்புக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது..
Similar News
News September 4, 2025
திமுகவை அசைக்க முடியாது: அமித்ஷாவுக்கு வைகோ பதிலடி

திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று சமீபத்தில் அமித்ஷா கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய வைகோ, இமயமலையை கூட அமித்ஷா அசைத்துவிடலாம், ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என பதிலடி கொடுத்துள்ளார். எண்ணற்ற பேர் தன் உயிர்களையும், ரத்தத்தையும் சிந்தியுள்ள திமுகவை இவ்வாறு கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.
News September 4, 2025
முதுகு வலியை விரட்டும் ‘பத்ராசனம்’ (மலை போஸ்)

☆கை, கால் தசைகள் வலுவடையும். தண்டுவட பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும்.
➥முதுகு நேராக இருக்கும்படி, நன்கு கால்களை விரித்து நிற்கவும்.
➥முன்னோக்கி உடலை வளைத்து, கைகள் முடிந்தவரை தரையில் பட, கால்களும், முதுகும் நேராகவே இருக்க வேண்டும்.
➥முடிந்தவரை உடலை வளைத்து தரையை தொட முயற்சிக்கவும். ➥இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News September 4, 2025
கவர்ச்சியை ரசிப்பதில் தவறில்லை: ரகுல் ப்ரீத் சிங்

திருமணத்துக்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை என ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். சொல்லப்போனால், திருமணத்துக்கு பிறகுதான் தனது அழகும் கவர்ச்சியும் அதிகரித்திருப்பதாக பேட்டியில் பேசிய அவர், திருமணம் என்பது நடிகைகளின் வளர்ச்சிக்கோ முன்னேற்றத்துக்கோ தடை போடாது என்றார். அத்துடன் கவர்ச்சியை ரசிப்பதில் தவறில்லை என்ற அவர், வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.