News April 8, 2025
பேரறிவாளன் வழக்கை மேற்கோள் காட்டி தீர்ப்பு

கவர்னருக்கு எதிரான வழக்கில், பேரறிவாளன் மற்றும் சூப்ரா வழக்குகளை மேற்கோள் காட்டி SC தீர்ப்பளித்துள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சட்டப்பிரிவு 200ன்படி, மாநில அரசின் அறிவுரைப்படி மட்டும்தான் கவர்னர் செயல்பட முடியுமா அல்லது சுயேச்சையாக முடிவு செய்ய அதிகாரம் உள்ளதா என்பதை ஆராய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 17, 2025
இறை பக்திக்கு புது விளக்கம் கொடுத்த சேகர் பாபு

இறை பக்தி என்பது வாழைப் பழம் போன்றது. வாழைப் பழத்தில் இருக்கும் தோல் சனாதனம். அதற்குள் இருக்கும் பழம்தான் இறைவன் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார். இதற்கு அதிமுகவின் கே.பி.முனுசாமி, அமைச்சர் சொல்லும் உவமை முழுமையாக தவறு. சனாதனத்திற்கும், இறைவனுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இறைவனும், சனாதனமும் ஒன்று என்றால், இவ்வளவு பெரிய விவாதமும் நீதிமன்ற வழக்குகளும் தேவையில்லை என்று பதிலடி கொடுத்தார்.
News April 17, 2025
வரலாற்றில் இன்று!

* 1966 நடிகர் விக்ரம் பிறந்த தினம்
* 1975 இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் காலமானார்.
* 1946 பிரான்சிடம் இருந்து சிரியா சுதந்திரம் பெற்றது.
* 1983 SLV ராக்கெட் இந்தியாவால் ஏவப்பட்டது. இது இந்தியாவில் விண்வெளி யுகத்தை தொடங்கியது.
* 1756 தீரன் சின்னமலை பிறந்த தினம்
* உலக ஹீமோபிலியா தினம்
News April 17, 2025
அவருக்காக அதை செய்தேன்: ரோஹித்

கடந்த ஜனவரியில் நடந்த ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரின் 5-வது போட்டியில் இருந்து வெளியேறியது குறித்து ரோஹித் மனம் திறந்துள்ளார். அந்த போட்டியில் தான் சரியாக விளையாடாததால், 4 போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட கில்லுக்கு வாய்ப்பு வழங்க கோரி பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவிடம் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். அணிக்கு என்ன தேவையோ அதையே அனைவரும் செய்ததாகவும் கூறியுள்ளார்.