News September 18, 2025

கடவுள் தொடர்பான வழக்கு: நீதிபதியின் கருத்தால் சர்ச்சை

image

ம.பி.யில் உள்ள ஜவாரி கோயிலில் சேதமடைந்த விஷ்ணு சிலையை மீட்க கோரி SC-ல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த CJI பி.ஆர்.கவாய், இவ்வழக்கு விளம்பரத்துக்காக தொடரப்பட்டது எனவும், அவ்வளவு பெரிய விஷ்ணு பக்தராக இருந்தால் சிலையை சீரமைக்க உங்கள் கடவுளிடமே கேளுங்கள் என மனுதாரரிடம் தெரிவித்துள்ளார். இவருடைய பேச்சு மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

Similar News

News March 5, 2026

தேனி: பைக் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் பலி.!

image

தேனி கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ் (26). இவர் நேற்று முன்தினம் அவரது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். கொடுவிலார்பட்டி சாலையில் பைக் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று இவர்களது பைக் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேல்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு (மார்.4) பதிந்துள்ளனர்.

News March 5, 2026

தவெகவுடன் கூட்டணி.. ராகுலை தடுத்தாரா கார்கே?

image

தவெகவுடன் கூட்டணி அமைத்தால் இளைஞர்களின் ஆதரவை பெறுவதோடு, TN-ல் காங்கிரஸை வலுப்படுத்தலாம் என ராகுல் காந்தி கணக்கிட்டாராம். ஆனால், தேர்தல் நேரத்தில் கூட்டணியை முறிக்க கூடாது; மத்தியில் பாஜக அரசை எதிர்கொள்ள திமுக MP-க்களின் பலமும் தேவை என ராகுலிடம் கார்கே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தவெக தனது வாக்குவங்கியை நிரூபித்தால், அடுத்த தேர்தலில் கூட்டணி குறித்து பார்க்கலாம் என கார்கே கூறினாராம்.

News March 5, 2026

பாஜக புகுந்த மாநிலம் உருப்படாது: ப.சிதம்பரம்

image

ஆமை புகுந்த வீடும், அமித்ஷா புகுந்த வீடும் உருப்படாது; அதுபோல பாஜக புகுந்த மாநிலமும் உருப்படாது என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக அடுத்த 5 ஆண்டுகளில் இருக்குமா என்றே தெரியவில்லை என சாடினார். தமிழ்நாட்டில், பாஜக நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம் எனக்கூறிய அவர், இதுதான் திமுகவுடன் கூட்டணி அமைக்க முக்கிய காரணம் என்றார்.

error: Content is protected !!