News March 19, 2024
இஸ்ரேல் அதிபரை எச்சரித்த ஜோ பைடன்!

காஸாவின் ரஃபா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ‘ரஃபா நகரில் நடத்தும் தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க அமெரிக்காவுக்கு, அதிகாரிகள் குழுவை அனுப்புமாறு நெதன்யாகுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
Similar News
News October 22, 2025
காந்தாரா ஹீரோவின் உண்மையான பெயர் தெரியுமா?

நடிகர், நடிகைகள் பெயரை மாற்றுவது சகஜமான ஒரு விஷயம். அப்படி பெயரை மாற்றிக்கொண்டவர்களில் நடிகர் ரிஷப் ஷெட்டியும் ஒருவர். ‘காந்தாரா’ வெற்றி ரிஷப் ஷெட்டியின் பெயரை உலகெங்கிலும் கொண்டு சேர்த்தது. ஆனால், அவரது உண்மை பெயர் ரிஷப் ஷெட்டி அல்ல, பிரசாந்த் ஷெட்டி. ஆரம்ப நாட்களில் சினிமாவில் வெற்றி கிடைக்காததால், தனது தந்தையின் பரிந்துரைப்படி பெயரை மாற்றிக்கொண்டதாக ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
66 வயதில் 10-வது குழந்தை: ஹெல்த் சீக்ரெட் என்ன?

ஒரு குழந்தைக்கே இன்றைய இளம் தம்பதியர் IVF உதவியை நாடுகின்றனர். ஆனால் ஜெர்மனியின் 66 வயது அலெக்சாண்டா, 10-வது குழந்தையை பெற்றெடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 50 வயதுக்கு பின் இது அவரது 8-வது குழந்தையாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையே, தான் கர்ப்பத்தை தாங்க காரணம் என்று கூறும் அவர் சரிவிகித உணவுடன் தினசரி நீச்சல், 2 hr நடை பயிற்சி செய்கிறார். மனதை மகிழ்ச்சியாக வைத்தாலே எல்லாமே சாத்தியம் என்கிறார்.
News October 22, 2025
BREAKING: இன்றும் ரெட் அலர்ட்.. கனமழை பொளந்து கட்டும்

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை(அக்.23) கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. அதுமட்டுமின்றி, அக்.28-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.