News April 27, 2025
J&K : தீவிரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொலை

J&K-ன் குப்வாரா மாவட்டத்தின் கண்டி காஷ் பகுதியில், தனது வீட்டில் இருந்த சமூக செயற்பாட்டாளர் குலாம் ரசூல் மாக்ராய் (45) தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், இதற்கான காரணம், என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இல்லை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
Similar News
News November 23, 2025
போர் நிறுத்தம்: உக்ரைனுக்கு டிரம்ப் வார்னிங்!

<<18356688>>ரஷ்ய போர் நிறுத்தம்<<>> தொடர்பான அமெரிக்காவின் வரைவு அறிக்கை, உக்ரைனுக்கான கடைசி சலுகை அல்ல என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வரைவை ஏற்க மறுத்தால், ரஷ்யாவுடன் தனித்து போரிட வேண்டியதுதான் எனவும், வரும் 27-ம் தேதிக்குள் உக்ரைன் சம்மதிக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் போர் நிறுத்தம் தான் தங்களது இலக்கு எனவும், அதை அடைய அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 23, 2025
சினிமா பிரபலம் விபத்தில் பலி.. நெஞ்சை உலுக்கும் (PHOTO)

பிரபல பஞ்சாபி பாடகர் <<18360848>>ஹர்மன் சித்து(37)<<>> பயணித்த கார் லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது, பாலிவுட் மற்றும் பஞ்சாபி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்வதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் தனது மகளிடம் அன்பாக பேசிவிட்டு பூ ஒன்றை பரிசாக கொடுத்துவிட்டு சென்றுள்ளார். கவலையில் ஆழ்ந்துள்ள அந்த பிஞ்சு குழந்தைக்கு யார் ஆறுதல் சொல்வது. So sad!
News November 23, 2025
அரசியலை விட்டு விலகத் தயார்: D.K.S சவால்

டி.கே.சிவகுமாருக்கு CM பதவி தர வலியுறுத்தி, அவரின் ஆதரவு MLA-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், கர்நாடக அரசியலில் குழப்பம் எழுந்துள்ளது. காங்., தலைமை சமாதான பேச்சை தொடங்கியுள்ள நிலையில், அமித்ஷாவுடன் DKS-க்கு தொடர்பு இருப்பதாக சித்தராமையா ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், கடுப்பான DKS, அமித்ஷாவுடன் தொடர்பில் இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என சவால் விடுத்துள்ளார்.


