News April 27, 2025

J&K : தீவிரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொலை

image

J&K-ன் குப்வாரா மாவட்டத்தின் கண்டி காஷ் பகுதியில், தனது வீட்டில் இருந்த சமூக செயற்பாட்டாளர் குலாம் ரசூல் மாக்ராய் (45) தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், இதற்கான காரணம், என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இல்லை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

Similar News

News December 6, 2025

மகளிர் உரிமைகளை மீட்க.. செளமியா அன்புமணி பயணம்

image

அன்புமணியின் TN மக்கள் உரிமை மீட்பு பயணத்தை தொடர்ந்து, செளமியா அன்புமணி மகளிர் உரிமை மீட்பு பயணத்தை இன்று தொடங்குகிறார். காஞ்சிபுரத்தில் இருந்து பயணத்தை தொடங்கும் அவர், அதிகாரத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்யவுள்ளார். மகளிர் வாக்குகளை கவர்வதற்கு அவர், இந்த பயணத்தை தொடங்குவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News December 6, 2025

புன்னகை அரசி சினேகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

image

வயசானாலும் அழகும், ஸ்டைலும், புன்சிரிப்பும் என்னிடம் மாறாது என்பது போல சினேகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளன. அதில், மிளிரும் ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிந்து தங்கம் போல சினேகா ஜொலி ஜொலிக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்த மெய்சிலிர்த்து போன ரசிகர்கள், ஹீரோயினாக நடிப்பதை ஏன் நிறுத்தினீர்கள் என்று SM-ல் கேட்கின்றனர். SWIPE செய்து நீங்களும் போட்டோக்களை பாருங்க

News December 6, 2025

டூத் பிரஷை மாற்றுவதற்கு இதுதான் சரியான நேரம்

image

சாஃப்டாக இருக்க வேண்டும், டங்க் கிளீனர் இருக்க வேண்டும் என்று நாம் தேடி தேடி வாங்கும் டூத் பிரஷை, குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றுவது அவசியமானது. 3 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் டூத் பிரஷை மாற்ற வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஒருவேளை இந்த 3 மாதத்திற்குள் நார் தேய்ந்தாலும் பிரஷை மாற்றிவிட வேண்டும். அதேபோல், காலாவதியான டூத் பிரஷை கொண்டு வேறு பொருள்களையும் சுத்தம் செய்யக்கூடாது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!