News June 23, 2024
43.34 கோடியாக அதிகரித்த ஜியோ வாடிக்கையாளர்கள்

செல்போன் நிறுவனங்கள் கடந்த ஏப்ரலில் சேர்த்த புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, ஜியோ 30 லட்சம் வாடிக்கையாளரை சேர்த்துள்ளது. ஏர்டெல் 20 லட்சம், வோடாபோன் 6.3 லட்சம் இழந்துள்ளன. இதன்மூலம் ஜியோவில் பயன்பாட்டில் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை 43.34 கோடியாக அதிகரித்த நிலையில், ஏர்டெல் 38.33 கோடியாகவும், வோடாபோன் 19.26 கோடியாகவும் குறைந்துள்ளது.
Similar News
News September 13, 2025
இந்தியாவை வெல்ல முடியும்: பாக்., கேப்டன் சூசகம்

ஆசிய கோப்பை தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் IND vs PAK போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாக்., கேப்டன் சல்மான் அலி அகா, இதேபோல் திட்டமிட்டப்படி தொடர்ந்து செயல்பட்டால் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என மறைமுகமாக இந்தியாவை குறிப்பிட்டுள்ளார். இதனால், இப்போட்டி மேலும் கவனம் ஈர்த்துள்ளது. பஹல்காம் தாக்குதலை கருத்தில்கொண்டு, இப்போட்டியை ரத்து செய்ய சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
News September 13, 2025
திமுகவுக்கு 13 மார்க்: அன்புமணி ரேட்டிங்

550 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதை கணக்கில் கொண்டால், அதற்கு வெறும் 13 மார்க் தான் என்ற அவர், இதனால் திமுக அரசு ஃபெயில் ஆகிவிட்டதாகவும் சாடியுள்ளார். முன்னதாக, அன்புமணி வெளியிட்டிருந்த ‘விடியல் எங்கே’ புத்தகத்தில் வேலைவாய்ப்புகள், மாதந்தோறும் மின் கணக்கீடு போன்றவை நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
News September 13, 2025
19 பள்ளி மாணவர்கள் மரணம்

மியான்மரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 19 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் ராணுவத்திற்கும், ஆயுதக் குழுவான அரக்கன் ஆர்மி (AA)-க்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. மேற்கு ராக்கைன் மாகாணத்தில் தனியார் பள்ளி மீது ஆயுதக் குழு நடத்திய வான்வழி தாக்குதலில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இது மிருகத்தனமான தாக்குதல் என்று ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.