News February 24, 2025
ஜியோ கிரிக்கெட் டேட்டா பேக்: 90 நாட்களுக்கு இலவசம்!

கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஒரு புதிய பேக்கை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. ஜியோ சினிமா, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகிய இரு நிறுவனங்களும் ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ என்ற பெயரில் அண்மையில் ஒரே நிறுவனமாக இணைந்துள்ளன. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் தொடர் இரண்டையும் நேரடியாக காணும் வகையில் ரூ.195-க்கான புதிய பேக் அறிமுகம் செய்துள்ளது. இதில் 90 நாள்களுக்கு ஜியோஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன், 15GB டேட்டாவும் கிடைக்கும்.
Similar News
News February 25, 2025
மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெடகாகனி என்ற இடத்தில் பள்ளம் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது எப்படி நடந்தது என்பது பற்றி விரிவான தகவல் இல்லை. உயிரிழந்த நால்வரில் ஒருவர் விவசாயி, மற்ற மூவர் கூலிகள் என்று சொல்லப்படுகிறது.
News February 25, 2025
மனைவியை விவாகரத்து செய்த மாதம்பட்டி ரங்கராஜ்

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ருதி என்பவரை திருமணம் செய்த அவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், சினிமா ஆடை வடிவமைப்பாளராக உள்ள ஜாய் கிரிஸில்டா என்பவரை அவர் தற்போது காதலிப்பதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. மெகந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்த அவர், கேட்டரிங் தொழிலும் செய்து வருகிறார்.
News February 25, 2025
பாலியல் வழக்கு: தேடப்பட்டு வந்தவர் மீது துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடியில் கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் கத்தியை காட்டி வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே, தலைமறைவான மாரிச்செல்வம் என்பவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காலில் குண்டு துளைத்த நிலையில், அவர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார்.