News September 13, 2024
மீனவர்களுக்காக கொந்தளித்த ஜெயக்குமார்!

நாகை மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இன்று கரை வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், “மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News December 27, 2025
திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார்: சீமான்

சீமான், விஜய் <<18646020>>பாஜக பெற்றெடுத்த<<>> பிள்ளைகள் என திருமாவளவன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ‘என்னையும், தம்பி விஜய்யையும் பாஜக பெற்றபோது, எங்க அண்ணன் திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தாரு’ என கிண்டலாக சீமான் பதிலடி கொடுத்துள்ளார். நாதக பொதுக்கூட்டத்துக்கு பின் பேசிய அவர், தமிழகத்தின் பிரச்னைகளையும், அதற்கான தீர்வையும் படம் போட்டு காட்டுவேன்; பொறுத்திருந்து பாருங்கள் என்றும் குறிப்பிட்டார்.
News December 27, 2025
வங்கதேசம் தான் எங்கள் நாடு: இந்துக்கள்

நாங்கள் இந்தியாவிற்கு செல்ல மாட்டோம் என வங்கதேச இந்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்துக்கள் என்ற ஒரே காரணத்தால், வலதுசாரி இஸ்லாமியர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்தியாவின் ஏஜெண்டுகள் என முத்திரை குத்துகின்றனர். இந்தியாவிற்கு போகச் சொல்லி எங்களை மிரட்டுகின்றனர். நாங்கள் வங்கதேச இந்துக்கள். இங்குதான் பிறந்தோம், இங்கு தான் இறப்போம், இதுதான் எங்கள் நாடு என அவர்கள் கூறுகின்றனர்.
News December 27, 2025
BREAKING: பொங்கல் பரிசு.. தமிழக அரசு அறிவித்தது

பொங்கல் பரிசுத் தொகுப்பு தயாராக உள்ளது, ஜன.10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இந்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


