News September 13, 2024

மீனவர்களுக்காக கொந்தளித்த ஜெயக்குமார்!

image

நாகை மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இன்று கரை வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், “மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Similar News

News November 27, 2025

தமிழக பாஜக தலைவர் மாற்றமா?

image

நயினாரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால், டெல்லிக்கு அழைத்த பாஜக தலைமை, அவருக்கு சில அறிவுரைகள் வழங்கியதாக தகவல் வெளியானது. இதனால் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு, நாராயணன் திருப்பதி மறுப்பு தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வெற்றி பெற்றுவிடுமோ என்ற பயத்தில், திமுக இதுபோன்ற வதந்தியை பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தலைவர் பதவியில் மாற்றமில்லை என்றும் அவர் கூறினார்.

News November 27, 2025

சனி தொல்லையை நீக்கும் வெற்றிலை பரிகாரம்!

image

சனீஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட வெற்றிலை வழிபாடு உதவும். ஒரு தட்டில் 2 வெற்றிலை, 3 பாக்குகள், 11 நாணயங்களை வைக்கவும். அதன் முன், நெய்யில் தீபம் ஏற்றி வையுங்கள். இயன்ற ஒரு பொருளை நெய்வேத்தியமாக படைக்கவும். வடக்கு திசை பார்த்தவாறு ‘ஸ்ரீ சொர்ண ஆகர்சன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமியில் செய்வது கூடுதல் பலனை கொடுக்கும். SHARE IT.

News November 27, 2025

BREAKING: தமிழ்நாட்டை நோக்கி வரும் புதிய புயல்

image

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும். இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘டிட்வா’ என பெயரிடப்படும். மேலும், புயலாக வலுப்பெற்ற பின் வட தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!