News September 13, 2024

மீனவர்களுக்காக கொந்தளித்த ஜெயக்குமார்!

image

நாகை மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இன்று கரை வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், “மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Similar News

News December 5, 2025

சீஹாக் ஹெலிகாப்டர்.. ₹7,995 கோடிக்கு இந்தியா ஒப்பந்தம்

image

24MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களுக்கான நிலைத்தன்மை தொகுப்பில் அமெரிக்காவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. 946 பில்லியன் டாலர் (₹7,995 கோடி) தொகுப்பின் மூலம், இந்திய கடற்படையின் கடல்சார் திறன்கள் மேம்படுத்தப்படும். இதில், உதிரிபாகங்கள், துணை உபகரணங்கள், தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவையும் அடங்கும். இது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

News December 5, 2025

தென்றலாய் தீண்டும் நேஹா!

image

‘டியூட்’ திரைப்படம் மூலம் பிரபலமான நேஹா ஷெட்டி, தற்போது இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். மென்மையான அலைகள் போன்ற பார்வை, ஆரஞ்ச் நிற ஆடை, அணிகலன்கள் ஆகியவை அவரது அழகை மேலும் செம்மைப்படுத்தி, ஈர்ப்பு ஒளியை வீசுகிறது. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க. யாருக்கெல்லாம் ‘டியூட்’ படத்தில் இவரை பிடித்தது? கமெண்ட்ல சொல்லுங்க.

News December 5, 2025

சர்க்கரை நோயை விரட்டும் அதலைக்காய்!

image

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்து, மாத்திரை இல்லாத இயற்கையான வழியை தேடுகிறீர்களா? அப்போ உணவுமுறையில் அதலைக்காய் சேர்த்துக்கோங்க. இதில் உள்ள சத்துகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடலில் சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்கிறது. இது பாகற்காய்க்கு இணையான மருத்துவ குணம் கொண்டது என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், மஞ்சள் காமாலை போன்ற நோயையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது.

error: Content is protected !!