News September 13, 2024
மீனவர்களுக்காக கொந்தளித்த ஜெயக்குமார்!

நாகை மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இன்று கரை வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், “மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News December 24, 2025
லோன் வட்டி விகிதத்தை குறைத்தது Union Bank

ரெப்போ வட்டி விகிதத்தை RBI, 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இந்நிலையில், Union Bank of India முக்கிய லோன்களின் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன்படி, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 30 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 7.15% வட்டியில் லோன் கிடைக்கும். வாகனக் கடன் 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 7.50% வட்டியுடனும், தனிநபர் கடன் 160 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.75%-லும் கிடைக்கும்.
News December 24, 2025
விஜய்யை விமர்சிக்காதீர்கள்: பியூஷ் கோயல்

விஜய்க்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் <<18649356>>பியூஷ் கோயல்<<>> கூறியுள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக நேற்று TN வந்த அவர், விஜய்யை ஸ்பாய்லர் என குறிப்பிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் திமுகவுக்கான சிறுபான்மை வாக்குகளை சரிசமமாக பிரிப்பதில் விஜய் முக்கிய பங்கு வகிப்பார். எனவே அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என கட்சியினரிடம் கூறியதாக தகவல் வந்துள்ளது.
News December 24, 2025
புதின் செயலால் போப் லியோ வருத்தம்!

கிறிஸ்துமஸ் நாளில் போர் நிறுத்தம் செய்ய புதின் மறுப்பு தெரிவித்தது, தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக போப் லியோ தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போரை கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நிறுத்த வேண்டும் என போப் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் ரஷ்யா அதனை முழுமையாக நிராகரித்துள்ளது. எனினும் குறைந்தபட்சம் கிறிஸ்துமஸ் நாளிலாவது அமைதி காக்க, மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் வைப்பேன் என போப் கூறியுள்ளார்.


