News September 13, 2024
மீனவர்களுக்காக கொந்தளித்த ஜெயக்குமார்!

நாகை மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இன்று கரை வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், “மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News December 11, 2025
நீதிபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஸ்ரீதர் வேம்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில் நீதிபதியின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதற்காக அவரை குறிவைப்பது சரியல்ல என Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது மிரட்டலுக்கான அப்பட்டமான முயற்சி என்றும், இதை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 11, 2025
தவெகவில் வைத்திலிங்கம் இணைய மாட்டார்: டிடிவி

உறுதியாக சொல்கிறேன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தவெகவில் இணைய மாட்டார் என்று டிடிவி தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியான உடனே, தவெகவில் இணைய ஆசைப்படுகிறீர்களா என தொலைபேசியில் அழைத்து அவரிடம் கேட்டேன். அதற்கு ஏன் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என வருத்தப்பட்டார் எனக் கூறிய டிடிவி, அவரை காயப்படுத்துவது போல் இதுபோன்று பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.
News December 11, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. மெசேஜ் வந்துருச்சா..!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு நாளை முதல் ₹1,000 டெபாசிட் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து அவர்களது செல்போன் எண்ணுக்கு அரசு சார்பில் மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணம் மெசேஜ்ஜில் தெரிவிக்கப்பட்டிருக்கும். அதன்படி, குடும்பத் தலைவிகள் மேல்முறையீடு செய்யலாம். உங்களுக்கு மெசேஜ் வந்துருச்சா?


