News September 13, 2024
மீனவர்களுக்காக கொந்தளித்த ஜெயக்குமார்!

நாகை மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இன்று கரை வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், “மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News December 31, 2025
சற்றுமுன்: இளம் கிரிக்கெட் வீரர் காலமானார்

8 ஆண்டுகள் கோமாவில் இருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் அக்ஷு ஃபெர்னாண்டோ (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். U19 போட்டிகளில் விளையாடி வந்த இவர், 2018-ம் ஆண்டு தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News December 31, 2025
விஜய் அரசியலில் வெல்ல இதை செய்யணும்: H.வினோத்

விஜய் அரசியலில் இறங்காமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன் என ‘ஜனநாயகன்’ இயக்குநர் H.வினோத் தெரிவித்துள்ளார். அறிவாளிகள், முட்டாள்கள், புத்திசாலித்தனமாக மோசடி செய்பவர்கள், முட்டாள்தனமாக மோசடி செய்பவர்கள் என அரசியலில் 4 விதமான மனிதர்களை தான் பார்ப்பதாகவும், இந்த 4 வகையினரையும் விஜய் சமாளித்தால், கண்டிப்பாக அவரால் அரசியலில் வெற்றி பெறமுடியும் என்றும் H.வினோத் கூறியுள்ளார்.
News December 31, 2025
2025-ல் மாவட்டம் வாரியாக நாய்க்கடி பாதிப்பு!

2025-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 6.23 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 2024-ல் இருந்ததை விட 2025-ல் 1.5 லட்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிகளவில் நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்ற டாப் மாவட்டங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்கள் பகுதியில் நாய்கள் தொல்லை இருக்கிறதா? கமெண்ட்ல சொல்லுங்க.


