News September 13, 2024
மீனவர்களுக்காக கொந்தளித்த ஜெயக்குமார்!

நாகை மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இன்று கரை வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், “மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News December 26, 2025
மத அரசியலை பாஜக செய்யவில்லை: அண்ணாமலை

மத உணர்வுகளால் அரசியல் செய்யும் பாஜக தமிழகத்தில் வர முடியாது என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், மத அரசியல் செய்வது பாஜக இல்லை என அண்ணாமலை பதிலளித்துள்ளார். கிறிஸ்துமஸுக்கு சர்ச், ஈத்-க்கு வாழ்த்து, தீபாவளி கொண்டாட்டம் என PM மோடி இருக்கிறார். கிறிஸ்துமஸ், ஈத்-க்கு முதல் ஆளாக செல்வேன், ஆனால் தீபாவளிக்கு வாழ்த்து கூற மாட்டேன் என்பது மத அரசியல் இல்லையா என கேள்வி எழுப்பினார்.
News December 26, 2025
கர்ப்பமானது தெரியாமலே குழந்தை பெற்ற பெண்!

US-ல் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தது, தெரியாமலேயே ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார். லோபஸ் (41) என்பவருக்கு கருப்பையில் கரு வளராமல், கல்லீரல் அருகில் வளர்ந்துள்ளது. இதனால், மாதவிடாய் உள்ளிட்ட அனைத்தும் சாதாரணமாக இருந்துள்ளது. 30,000 பெண்களில் ஒருவருக்கு இத்தகைய அரிய கருத்தரிப்பு நடைபெறும், 10 லட்சம் பேரில் ஒருவருக்கே கரு முழுவளர்ச்சி அடையும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
News December 26, 2025
உதவிக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி

தான்சானியாவில் உள்ள புகழ்பெற்ற கிளிமாஞ்சாரோ சிகரம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால், மருத்துவ அவசர உதவிக்காக நோயாளிகளை ஏற்றிச் சென்றபோது தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பைலட், டாக்டர், வழிகாட்டி & 2 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததை உள்ளூர் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


