News September 13, 2024
மீனவர்களுக்காக கொந்தளித்த ஜெயக்குமார்!

நாகை மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இன்று கரை வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், “மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News January 19, 2026
ஜன நாயகன் வழக்கு.. புதிய பரபரப்பு தகவல்

ஜன நாயகன் தணிக்கை சான்று தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நாளை சென்னை HC-ல் விசாரணைக்கு வருகிறது. காலை 11:30 மணிக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடக்கும் என்றும், நாளையே தீர்ப்பு அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தடை நீக்கப்பட்டால் ஜன நாயகன் விரைவில் ரிலீசாகும். சென்சார் போர்டின் கோரிக்கை ஏற்கப்பட்டால் படம் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பப்படும்.
News January 19, 2026
நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ₹9,000 கோடி கேட்கும் டிரம்ப்

காசாவின் அமைதி வாரியத்தில் நிரந்தர உறுப்பினர் பதவி விரும்பும் நாடுகள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (₹9,000 கோடி) செலுத்த வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. இந்தியாவின் <<18893549>>PM மோடி <<>>உட்பட உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு பணம் செலுத்தவும், இந்த நிதி காசாவை மீண்டும் கட்டியெழுப்ப பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
News January 19, 2026
பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்குறீங்களா.. ALERT!

குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான நீர் இருக்கும் என்பதால் அவசியம் இல்லை. அதையும் மீறி அதிகமாக தண்ணீர் கொடுத்தால் குழந்தைக்கு சேரவேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம் என்கின்றனர். 6 மாதங்களுக்கு பிறகு தினமும் 2 – 8 ஸ்பூன் வரை இடைவெளிவிட்டு அவ்வப்போது தண்ணீர் கொடுக்கலாம். SHARE.


