News October 5, 2025
நகை கடன்.. வந்தது புதிய அறிவிப்பு

நகை கடன் வாங்குபவர்கள், இனி அசல் & வட்டியை 12 மாதங்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும். முன்பு இருந்த, வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பிக்கும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல கடனை செலுத்தியவுடன், 7 வேலை நாள்களுக்குள் அடகு வைத்த தங்கத்தை, கடன் கொடுத்த நிறுவனம் ஒப்படைக்க வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 5, 2025
Pak-க்கு Handshake செய்யாமல் சென்ற மகளிர் அணி

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாக்., கேப்டன் ஃபாத்திமாவுக்கு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கைகுலுக்காமல் சென்றுள்ளார். இதேபோல, Asia Cup-ல் PAK அணியினருக்கு இந்திய வீரர்கள் கைக்கொடுக்காமல் போனது பெரும் சர்ச்சையானது. இதற்கு விளையாட்டில் அரசியல் வேண்டாம் என்ற கருத்துகள் எழுந்தன. இந்நிலையில் மகளிர் அணியும் இப்படி செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
News October 5, 2025
நடிகர் அஜித் குமாருக்கு தமிழக அரசு பாராட்டு

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி 3-வது இடம் பிடித்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்ததாக DCM உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் தமிழ்நாட்டை பெருமையடையச் செய்த அஜித்துக்கு வாழ்த்துகள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் ரேஸில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் லோகோவை பயன்படுத்தியதற்கு தமிழக அரசு சார்பில் நன்றி எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
News October 5, 2025
இனி முடி கொட்டும் கவலை இல்லை.. இத யூஸ் பண்ணுங்க!

லவ் Breakup-ஐ விட, முடி கொட்டுவது தான் ஆண்களின் மனதை பெருமளவில் உடைக்கிறது. ஆனால், இனி அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே இந்த மூலிகை ஆயிலை ரெடி செய்து, யூஸ் பண்ணினால் முடி கொட்டும் பிரச்னை தீரும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். தேங்காய் எண்ணெய் & கறிவேப்பிலை இலைகளை சேர்த்து சூடாக்கி, உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யுங்க. இதனை வாரத்திற்கு இருமுறை என 3 வாரங்கள் செய்ய பரிந்துரைக்கின்றனர். SHARE.