News October 4, 2025
நகைக் கடன்… வந்தது முக்கிய அறிவிப்பு

நகைக் கடன் விதிகளில் மாற்றம் செய்து RBI அறிவித்துள்ளது. 2026 ஏப்.1 முதல் நகைக் கடன் வரம்பு 3 அடுக்குகளாக பிரிக்கப்படும். ₹2.5 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு நகை மதிப்பில் 85% கடன் வழங்கப்படும். ₹2.5- ₹5 லட்சத்திற்குள் கடன் வேண்டுமெனில் 80%, அதற்குமேல் வேண்டுமெனில் 75% அளவுக்குமே கடன் கிடைக்கும். மேலும், நகைக் கடனை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. SHARE
Similar News
News October 5, 2025
கொதிக்கும் ரோஹித் ரசிகர்கள்

கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதற்கு, அவரின் ரசிகர்கள் SM-ல் கொதித்தெழுந்துள்ளனர். இந்திய அணி 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக கோப்பை வெல்லாமல் இருந்தது. ரோஹித் வந்தபின் 8 மாதங்களில் ஒரு தோல்வி கூட அடையாமல் 2 ICC கோப்பைகளை வென்றது. இந்திய கேப்டன்களிலேயே ODI-யில் அதிக வெற்றிவீதம் வைத்திருக்கும் ரோஹித்தை நீக்க ஒரு காரணம்கூட சொல்ல முடியாது என்று கொதிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News October 5, 2025
குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து

7 முதல் 15 வயது குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்படுள்ளது. இந்த தள்ளுபடி அடுத்த ஒரு வருடம் அமலில் இருக்கும். இதன் மூலம் பயோமெட்ரிக் விவரங்களை ஆதாரில் இலவசமாக சேர்க்கலாம். இதற்கு முன், இந்த விவரங்களை முதல்முறை சேர்ப்பதற்கு மட்டும் இலவசம் என்று இருந்தது. அதேபோல், கடந்த அக்.1 முதல் ஆதார் சேவை கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மேற்கூறிய விவரங்களை சேர்க்க ₹125 செலுத்த வேண்டும்.
News October 5, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெகவினர் சந்திக்கவில்லை என தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை <<17913262>>முதல்முறையாக தவெக நிர்வாகிகள்<<>> இன்று சந்தித்து ஆறுதல் கூறினர். இதனையடுத்து, விரைவில் விஜய் கரூர் செல்வதற்கு முடிவெடுத்துள்ளார். அதற்காக, போலீஸ் அனுமதி பெறும் பணிகளில் மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். அனுமதி கிடைத்ததும் விஜய் கரூர் செல்லவுள்ளார்.