News October 23, 2024

இபிஎஸ்-க்கு பொறாமை: முதல்வர்

image

திமுக சிறப்பாக செயல்படுவதால் இபிஎஸ் பொறாமைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை செய்து வருவதாகக் கூறினார். இதனிடையே, மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி எனவும், ஜோசியரை போல அவர் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.

Similar News

News August 12, 2025

அன்புமணியின் புது ஸ்கெட்ச்: ஒர்க் அவுட் ஆகுமா?

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டுமென பாமகவினரை அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில், கடந்தாண்டு எவ்வாறு மதுவிலக்கு வேண்டி கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றினோமோ அதைப்போன்று இந்தாண்டு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 12, 2025

டெல்லியில் இருந்து நற்செய்தி வருகிறது: அண்ணாமலை

image

தமிழகத்திற்கு குறிப்பாக கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூரில் ‘அத்திக்கடவு நாயகன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார். அண்மையில் TN விவசாயிகள் டெல்லியில் PM மோடியை சந்தித்து பேசியிருந்தனர். அத்திக்கடவு – அவிநாசி 2-ம் கட்ட திட்டம் (அ) விவசாயிகளுக்கு புதிய திட்டம் குறித்தோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

News August 12, 2025

இறை வழிபாட்டின் முழு பலனை பெற..

image

வீட்டில் தினமும் இஷ்ட தெய்வத்தை வணங்க முடியவில்லை என்றால், அதற்கு கர்ம வினைகளே காரணமாக இருக்கும். இந்த கர்ம வினையை மாற்றி, வீட்டில் பூஜை செய்ய, இந்த 3 விஷயங்களை செய்யுங்கள். வீட்டில் பூஜை செய்யும் போது, இறைவனின் படத்திற்கு கைகளால் பூக்களைத் தூவி, மனதை ஒருநிலைப்படுத்தி, வாய் முழுக்க சத்தமாக கடவுள் மந்திரங்களை சொல்லி பூஜியுங்கள். இது பூஜையின் முழு பலன்களை அடைய செய்யும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!