News December 5, 2024
ஜெயலலிதா நினைவு தினம்: இபிஎஸ் வேண்டுகோள்

“அமைதி, வளம், வளர்ச்சி” பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்போம் என்று அதிமுகவினருக்கு இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயலலிதா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இபிஎஸ் வெளியிட்ட பதிவில், மக்களால் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு,
தன் ஈடு இணையில்லா நலத்திட்டங்களால் மக்களின் இதயங்களில் வாழும் ஒப்பற்ற ஆளுமை ஜெயலலிதா என புகழ்ந்துள்ளார்.
Similar News
News November 15, 2025
தேவநாதன் அதிரடியாக கைது

பணமோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். முதலீட்டாளர்களிடம் ₹500 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் ₹100 கோடி நிபந்தனை தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு சென்னை கோர்ட் ஜாமீன் வழங்கியது. ஆனால், அந்த நிபந்தனையை நிறைவேற்ற தவறியதால் அவரை கைது செய்ய 2 நாள்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சென்னை கோர்ட்டில் ஆஜரான நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.
News November 15, 2025
ரயில் விபத்துக்களை தடுக்க நவீன தொழில்நுட்பம்

2035-க்குள் அனைத்து ரயில்வே வழித்தடங்களிலும் ‘கவச்’ தொழில்நுட்பத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,900 கிமீ வரை ‘கவச்’ பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரயில் எஞ்சின், தண்டவாளம், சிக்னலை இணைத்து இத்தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது. ஒரே தடத்தில் 2 ரயில்கள் வந்தால், தானாகவே பிரேக் பிடித்து ரயிலின் வேகத்தை குறைக்கும். அதேபோல், நிர்ணயித்த வேகத்தை விட அதிகமாக இயங்க அனுமதிக்காது.
News November 15, 2025
21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

வாழைப்பழங்களிலேயே செவ்வாழைப்பழத்தில் தான் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழையை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.


