News December 5, 2024

ஜெயலலிதா நினைவு தினம்: இபிஎஸ் வேண்டுகோள்

image

“அமைதி, வளம், வளர்ச்சி” பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்போம் என்று அதிமுகவினருக்கு இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயலலிதா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இபிஎஸ் வெளியிட்ட பதிவில், மக்களால் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு,
தன் ஈடு இணையில்லா நலத்திட்டங்களால் மக்களின் இதயங்களில் வாழும் ஒப்பற்ற ஆளுமை ஜெயலலிதா என புகழ்ந்துள்ளார்.

Similar News

News December 7, 2025

பாமக விவகாரம்.. EC-க்கு அதிகாரமில்லை: டெல்லி HC

image

PMK உள்கட்சி விவகாரத்தில் தலையிடுவதற்கு EC-க்கு அதிகார வரம்பு இல்லை என டெல்லி HC தெரிவித்துள்ளது. PMK தலைவர் விவகாரத்தில் EC-ன் முடிவுக்கு எதிராக ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் உள்கட்சிக்குள் நிகழ்ந்த தனிப்பட்ட பிரச்னைக்கு சிவில் நீதிமன்றத்தை நாட ராமதாஸை அறிவுறுத்தியுள்ள HC, அன்புமணி நடத்திய பொதுக்குழு முறையானதா என்பதை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளது.

News December 7, 2025

விஜய் கட்சியில் மற்றொரு தலைவர் இணைகிறாரா?

image

திமுக உடனான கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக, பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்., தலைமை விரைவில் நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், தவெகவில் இணைய அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலில், மயிலாடுதுறையில் சீட் கிடைக்காததற்கு திமுகவின் தலையீடே காரணம் என அதிருப்தியில் இருந்த <<18476742>>பிரவீன்<<>>, சமீபத்தில் விஜய்யை சந்தித்து பேசினார்.

News December 7, 2025

இண்டிகோ CEO-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய DGCA

image

இண்டிகோ பிரச்னை தொடர்பாக விளக்கம் கேட்டு அந்நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பர்ஸுக்கு DGCA நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விமானங்கள் ரத்துக்கான காரணம், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யாதது, உள்ளிட்டவை குறித்து 24 மணி நேரத்திற்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரத்திற்கு உரிய ஏற்பாடுகளை செய்யாமல், இப்பிரச்னையில் பீட்டர் எல்பர்ஸ் கடமை தவறி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

error: Content is protected !!