News July 26, 2024

ஜெயக்குமார் கொலை: திமுக நிர்வாகியிடம் விசாரணை

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் இன்று ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் பெல்சியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவர் சபாநாயகர் அப்பாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 11, 2025

நெல்லையில் ரூ,15 லட்சம் வரை விபத்து காப்பீடு

image

நெல்லை மாவட்டத்தில் 449 தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 – 65 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.

News July 11, 2025

புனிதப் பயணம் மேற்கொள்ள நிதி உதவி மக்களுக்கு அழைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கிய மதத்தினர் புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

News July 11, 2025

நெல்லை:பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

image

நெல்லை மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வரும் 12ம் தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம். இதற்கான உரிய ஆவணங்களை மக்கள் கொண்டு சென்று பயன்பெறலாம் என ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!