News March 20, 2024
மகனுக்கு மீண்டும் சீட் வாங்கிய ஜெயக்குமார்

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெ. ஜெயவர்த்தன் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். முன்னதாக 2014 (வெற்றி), 2019 (தோல்வி) தேர்தல்களில் தென் சென்னையில் போட்டியிட்ட அவர், தற்போது 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். 2014 இல் ஜெயவர்த்தன் தனது 26 வயதில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் இளைய எம்.பி என்ற பெருமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 31, 2025
₹1,000 கட்டி உடனே செய்யுங்க… நள்ளிரவு முதல் செல்லாது

PAN எண்ணுடன் ஆதார் எண்ணை, இதுவரை இணைக்கவில்லை என்றால் இன்று நள்ளிரவு 12 மணிக்குள் இணைத்து விடுங்கள். இல்லையென்றால், நாளை முதல் PAN எண் செல்லாது என அறிவிக்கப்படும். ஏற்கனவே காலக்கெடு முடிந்துவிட்டதால், இப்போது PAN – ஆதாரை இணைக்க விரும்புபவர்கள் ₹1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரம், 2024 அக்.1-க்கு பின் PAN அட்டை வாங்கியவர்கள் அபராதம் இன்றி இணைத்துக் கொள்ளலாம்.
News December 31, 2025
வன்முறையை தூண்டியதாக சீமான் மீது போலீஸில் புகார்

TN-ல் சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சீமான் பேசியதாக திராவிட தமிழர் கட்சியின் சார்பில் மதுரை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 11-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிராமண கடப்பாரையால் பாழடைந்த திராவிட கோட்டையை இடிப்பேன் என சீமான் பேசியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு சமூகத்தினரிடையே வன்முறையை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
பொங்கல் விடுமுறையில் மாற்றம் வரப்போகிறதா?

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல, இதுவரை அரசு பஸ்களில் 77,392 பேர் புக்கிங் செய்துள்ளனர். அடுத்த வாரம் ஸ்பெஷல் பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனால், புக்கிங் எண்ணிக்கை மேலும் உயரும். எனவே, சிரமமின்றி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக, பொங்கலுக்கு முதல் நாளான ஜன.14-ல் விடுமுறை விட பலரும் வலியுறுத்தியுள்ளனர். அரசும் விரைவில் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


