News February 28, 2025
ஜனநாயகன் VS பராசக்தி: சினிமாவிலும் அரசியல்?

‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ படங்கள் 2026 பொங்கலில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கடைசி படம் பொங்கலுக்கு வெளியானால், அது அடுத்து நடைபெறும் தேர்தலுக்கு பயன்படும் என விஜய் தரப்பு நம்புகிறதாம். இதனால், தனது பட ரிலீஸை ஒத்திவைக்க SK முயற்சித்தும், அதற்கு வெளியீட்டு நிறுவனமான உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மறுத்துவிட்டதாம். மேலும், அப்படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.
Similar News
News February 28, 2025
சர்ச்சை கருத்து: மயிலாடுதுறை கலெக்டர் மாற்றம்

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, <<15609948>>சிறுமி தவறாலேயே<<>> அந்த சம்பவம் நடந்ததாகக் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, அவரை மாற்றி, அப்பதவியில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது.
News February 28, 2025
விஸ்கி, பீர் மிக்சிங் செய்து குடித்தால் என்ன நடக்கும்?

சிலருக்கு விஸ்கி குடிக்கும் பழக்கமும், சிலருக்கு பீர் குடிக்கும் பழக்கமும் இருக்கும். இந்த இரண்டும் வெவ்வேறு ஆல்கஹால் என்பதால் இரண்டையும் ஒன்றாக கலந்து குடிப்பது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாந்தி, பேதி மற்றும் தூக்கமின்மையை அது உண்டாக்கும். அதேபோல், உடல்நலனில் மேலும் பல எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். ஆதலால் விஸ்கி, பீர் இரண்டையும் கலந்து குடிப்பதை தவிர்ப்பதே நல்லது.
News February 28, 2025
பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1இல் தொடங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, மாநிலம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.