News March 25, 2025
தமிழ்நாட்டில் ஜனசேனா? – பவன் போடும் கணக்கு!

ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், தமிழ்நாட்டில் தனது கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள அவர், இங்குள்ள தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுகளை பெற பிளான் போட்டுள்ளாராம். திமுகவில் இருந்து சஸ்பெண்ட்டான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தெலுங்கு சமுதாய தலைவர்களிடம் பவன் தரப்பில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
Similar News
News March 26, 2025
மார்ச் 27: வரலாற்றில் இன்றைய தினம்

1964 – வட அமெரிக்காவின் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 125 பேர் உயிரிழந்தனர்.
1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் விமான விபத்தில் உயிரிழந்தார்.
2009 – இந்தோனேசியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
2016 – லாகூரில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் பலியானார்கள்.
News March 26, 2025
ORS கரைசலை எப்போதெல்லாம் அருந்தலாம்?

ORS கரைசல் என்பது உடலில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்யக் கூடியதாகும். சோடியத்துடன் குளுக்கோஸ் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவில் நீரில் கலந்து கொடுக்கும்போது உடல் உடனே உட்கிரகித்து கொள்கிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி இருப்பவர்களுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு அதிகம் ஏற்படும். இதனை தடுக்க ORS கரைசலை கொடுக்கலாம். மேலும் கோடைக் காலங்களில் ஏற்படும் நீர் வறட்சியைத் தடுக்கவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
News March 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.