News January 11, 2025
ஜன. 22 பதிலாக ஏன் இன்றே 1ம் ஆண்டு கொண்டாடட்டம்?

அயோத்தி ராமர் பிரதிஷ்டை 2024 ஜன.22ம் தேதி நடைபெற்றது. 2025ல் இன்றே கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் சாஸ்திரப்படி, ஆங்கிலேயே நாட்காட்டிக்கு பதிலாக இந்த தேதி தேர்வாகியுள்ளது. ஒரே நேரத்தில் 10 மங்களகர யோகங்கள் உண்டாகும் பௌஷ் சுக்ல துவாதசி வருகிறது. 2024, ஜன.22ல் கூர்ம துவாதசி வந்ததால், அன்று பிரதிஷ்டை நடைபெற்றது. துவாதசி பாரம்பரியமாக இந்துக்களின் நம்பிக்கையின்படி, விஷ்ணுவிற்கு உகந்த நாளாகும்.
Similar News
News January 15, 2026
மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க தினமும் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பழத்தில் பொட்டாசியம் & மக்னீசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News January 15, 2026
தமிழகத்தின் புதிய ஜல்லிக்கட்டு மைதானம்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில், ₹3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை DCM உதயநிதி இன்று திறந்து வைத்தார். அவர் பேசுகையில், திருச்சிக்கு மலைக்கோட்டை, காவிரி ஆறு எப்படி அடையாளமோ, அதே போன்று சூரியூர் ஜல்லிக்கட்டும் ஒரு அடையாளம் என்றவர், இதுவரை மந்தையில், குளத்தில் நடந்த சூரியூர் ஜல்லிக்கட்டு நாளை ஜன.16 முதல் இந்த நிரந்தர அரங்கில் நடைபெறும் என அறிவித்தார்.
News January 15, 2026
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் CM மரியாதை!

பொங்கல் திருநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று CM ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக கடற்கரை சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். மேலும், நாராயணப்பதெருவில் சாலையோரம் வசிக்கும் மக்களை சந்தித்தவர், அங்கு வசித்துவரும் துரை-சுமதி என்ற தம்பதியரின் ஆண் குழந்தைக்கு ‘வெற்றி’ என்று பெயர் சூட்டியுள்ளார்.


