News January 2, 2025

ஜன.2: வரலாற்றில் இன்று

image

1757 – கொல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1954 – பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
1959 – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் பிறந்தநாள்.
1988 – கடத்தல் மன்னன் வரதராஜன் முதலியார் காலமானார்.

Similar News

News December 9, 2025

சற்றுமுன்: அதிமுகவில் இருந்து விலகினர்

image

ஒருபுறம் விஜய்யின் பரப்புரை வேகமெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், மறுபுறம் செங்கோட்டையன் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில், அதிமுக சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். மேலும், KAS கை காட்டும் நபருக்குத்தான் எங்கள் ஓட்டு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

News December 9, 2025

இண்டிகோ பிரச்னை எப்போது தீரும்? அமைச்சர் விளக்கம்

image

இண்டிகோ பிரச்னை சீராகி வருவதாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், விமானங்களின் ரத்து, தாமதம் கணிசமாக குறைந்துள்ளதாகவும், விரைவில் நிலைமை முழுவதும் சீராகும் என்றும் குறிப்பிட்டார். விசாரணைக்கு பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், ரீபண்ட், பேகேஜ்களை வழங்குவது, பயணிகள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

News December 9, 2025

விஜய் குறிப்பிட்ட ‘வகையறா’ என்றால் என்ன?

image

தமிழகத்தையும், புதுச்சேரியையும் பிரித்து பார்க்கும் ‘வகையறா’ நாம் அல்ல என விஜய் இன்று பரப்புரையில் பேசியிருந்தார். இந்த வகையறா என்ற சொல், பெருமளவில் தென்மாவட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம், ஒரு வம்சம், குலதெய்வ வழிபாடு முதலியவற்றின் அடிப்படையில் வகையறா என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும் அகராதியின்படி, வகையறா என்றால் முதலியன, தொடர்புடையவர்கள் என்றும் பொருள்படும்.

error: Content is protected !!