News April 23, 2025

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: பலி 28ஆக உயர்வு

image

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. பகல்ஹாமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும் கடற்படை அதிகாரி ஒருவரும், உளவுத்துறை அதிகாரி ஒருவரும் பலியாகினர். 3 தமிழர்கள் உள்பட சுமார் 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பொறுப்பேற்றுள்ளது.

Similar News

News April 23, 2025

2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்

image

ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லா வழியே இந்தியாவுக்குள் இன்று தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். அப்போது எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 2 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்மூலம் அங்கு நடக்கவிருந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

News April 23, 2025

வெளியான தீவிரவாதிகளின் வரைபடம்…

image

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேரின் வரைபடங்களை NIA வெளியிட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவதர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலை வைத்து இந்த வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பஹல்காமை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

News April 23, 2025

எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,500க்கும் மேல் உயர்வு

image

எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,500க்கும் மேல் உயர்வடைந்துள்ளது. ஒரு யூனிட் எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்டவை ரூ.1,000 உயர்த்தப்படும் என்று அதன் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர். எனினும், ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை ரூ.4,900-ல் இருந்து ரூ.6,450ஆகவும், ஜல்லி ஒரு யூனிட் ரூ.3,900ல் இருந்து ரூ.5,523ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பி.சாண்ட் விலை ரூ.5,800ல் இருந்து ரூ.7,552ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!